பெண் கல்வியின் அவசியத்தை உணர்த்தும் பொம்மலாட்டம் - ஆர்வத்துடன் கண்டுகளித்த திருப்பூர் மாணவிகள்!

திருப்பூரில் உள்ள பழனியம்மாள் அரசுப்பள்ளியில் வளரிளம் பெண்களின் தொடர் கல்வியின் அவசியம் குறித்து மாணவிகளுக்கு பொம்மலாட்டத்தின் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.



திருப்பூர்: திருப்பூர் பழனியம்மாள் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற விழிப்புணர்வு பொம்மலாட்ட நிகழ்ச்சியை ஏராளமான மாணவிகள் ஆர்வமுடன் கண்டுகளித்தனர்.



சமூக கல்வி மற்றும் முன்னேற்ற மையம், பொம்மலாட்ட கலைக்குழுவினர் சார்பில், வளரிளம் பெண்களின் தொடர் கல்வி மற்றும் பாதுகாப்பை எடுத்துரைக்கும் விதமாக பொம்மலாட்ட கலைப்பயணம் திருப்பூரில் இன்று தொடங்கியது. இந்த கலைப் பயணமானது, வரும் 12ஆம் தேதி தேனியில் நிறைவடைய உள்ளது.

இதில் திருப்பூர், கோவை, ஈரோடு, திண்டுக்கல், தேனி போன்ற தொழில் நகரங்களில் பள்ளி விடுமுறை நாட்களில் ஆடை உற்பத்தி தொடர்பான பல்வேறு வேலைகளுக்கு வளரிளம் பருவத்தினர் சென்று வருகின்றனர்.



இதனால், பள்ளி இடை விலகல் அதிகரித்து வருவதை கட்டுப்படுத்தும் விதமாக, திருப்பூர் பழனியம்மாள் மாநகராட்சி மேல்நிலை பள்ளியில் நடைபெற்ற பொம்மலாட்ட நிகழ்ச்சியின் மூலம் மாணவிகளுக்கு கல்வியின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.



இந்த பொம்மலாட்ட நிகழ்ச்சியை, ஏராளமான மாணவிகள் ஆர்வமுடன் கண்டு களித்தனர்.

Newsletter

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...

கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வால...

இரயில்வே உதவி லோகோ பைலட் வேலைவாய்ப்புக்கு கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

இரயில்வே தேர்வு வாரியம் 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்களை அறிவித்துள்ளதை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு ம...

அரசு மருத்துவமனைகளில் மரியாதையுடன் தரமான சேவைகள் வழங்கப்பட வேண்டும் : அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் அறிவுரை.

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான சுகாதார நலப்பணிகள் ஆய்வுக் கூட்டத்தில், மாநிலம் முழுவதும் உள்ள சுகாதார நலப்பணிகள், அரச...

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...