கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி பணிகளை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் இன்று நேரில் ஆய்வு செய்து, பணிகளை விரைவாகவும் தரமாகவும் முடிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். மொத்தம் ரூ.117.70 இலட்சம் மதிப்பீட்டில் பணிகள் நடைபெறுகின்றன.


Coimbatore: கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் இன்று நேரில் சென்று ஆய்வு செய்தார். பணிகளை விரைவாகவும், தரமாகவும் செய்து முடிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.



வடக்கு மண்டலம் வார்டு எண் 29-க்குட்பட்ட கணபதி புதூர் முதல் வீதியில் மாநகராட்சி பொது நிதியின் கீழ் ரூ.28.00 இலட்சம் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் மற்றும் சிறுபாலம் அமைக்கும் பணி நடைபெறுகிறது. வி.என்.எஸ்.நகர் பகுதியில் ரூ.5.00 இலட்சம் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் மற்றும் சிறுபாலம் திரும்ப கட்டும் பணியும் முன்னெடுக்கப்படுகிறது.



கொரத்தோட்டம் பகுதியில் மாநகராட்சி பொது நிதியின் கீழ் ரூ.5.00 இலட்சம் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் மற்றும் சிறுபாலம் திரும்ப கட்டும் பணி நடைபெறுகிறது. கணபதி கார்டன் பகுதியில் ரூ.40.00 இலட்சம் மதிப்பீட்டில் நகர்ப்புற நலவாழ்வு மையத்தில் ஆய்வகம் மற்றும் சுற்றுச்சுவர் அமைக்கும் பணி முன்னெடுக்கப்படுகிறது.



வி.என்.எஸ்.நகர் முதல் சின்னசாமி நகர் வீதியிலும், வி.என்.எஸ்.நகர் இடையே கால்வாயின் குறுக்கேயும் ரூ.39.70 இலட்சம் மதிப்பீட்டில் பாலம் கட்டும் பணிகள் நடைபெறுகின்றன. இந்த அனைத்து பணிகளையும் மேயர் நேரில் சென்று ஆய்வு செய்தார்.



மேயர் ஆய்வின் போது, மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர். மொத்தம் ரூ.117.70 இலட்சம் மதிப்பீட்டில் இந்த வளர்ச்சி பணிகள் செயல்படுத்தப்படுகின்றன.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...