தாராபுரத்தில் இருசக்கர வாகனத்திருட்டு வழக்கு - சிசிடிவி காட்சி உதவியுடன் 3 பேர் கைது

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் இரு சக்கர வாகனத்திருட்டு உள்ளிட்ட குற்ற சம்பவங்களில் தேடப்பட்டு வந்த 3 குற்றவாளிகளை சிசிடிவி காட்சிகள் உதவியுடன் காவல்துறையினர் கைது செய்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் உடுமலைசாலையில் ஸ்டேட் பேங்க் அருகிலும் மற்றொரு பகுதியான பெரிய கடைவீதியிலும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு இருசக்கர வாகனங்களை மர்ம நபர்கள் திருடிவிட்டதாக தாராபுரம் காவல் நிலையத்தில் இருசக்கர வாகனத்தை பறிகொடுத்த நபர்கள் புகார் தெரிவித்திருந்தனர்.

அந்தப் புகார்களை பதிவு செய்த காவல்துறையினர், தாராபுரம் நகர் முழுவதும் பொருத்தியுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அப்போது மூன்று குற்றவாளிகளை அடையாளம் கண்டுபிடித்து காவல்துறையினர் விசாரணையை தொடங்கினர்.

அதில், கோவை மாவட்டம் செல்வபுரம், சொக்கநாத புதூர் பகுதியைச் சேர்ந்த பழைய குற்றவாளி கார்த்தி என்பவரை பிடித்து விசாரித்தனர்.

அப்போது, அவர் தனது கூட்டாளிகளான நந்தகுமார், மகேஸ்வரன், வல்லரசு ஆகியோரை அடையாளம் காட்டினார்.

இதனைத் தொடர்ந்து, தொடர்புடைய 3 பேரையும் தாராபுரம் காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவையில் பள்ளி, பேருந்து நிலையங்கள் அருகேயுள்ள டாஸ்மாக் கடைகள் மூட உத்தரவு.

தமிழகம் முழுவதும் பள்ளிகள், கல்வி நிலையங்கள், வழிபாட்டு தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகில் செயல்பட்டு வரும் 717...

சென்னை - கோவை இடையே மே 31 வரை கோடைகால சிறப்பு ரயில் சேவை; தொழில்துறை வரவேற்பு

கோடை விடுமுறை காலத்தில் சென்னை - கோவை இடையே மே 13 முதல் 31 வரை சிறப்பு ரயில் சேவை இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்...

2026 நீட் தேர்வு ரத்து: மே 3ஆம் தேதி நடைபெற்ற NEET தேர்வு செல்லாது! தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

வினாத்தாள் கசிந்ததாக எழுந்த புகார்கள் மற்றும் தேர்வின் நம்பகத்தன்மை குறித்த சந்தேகங்களைத் தொடர்ந்து, நாடு முழுவதும் கடந்...

உலக செவிலியர் தினம்: திருப்பூரில் விழிப்புணர்வு பேரணி

திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மெழுகுவர்த்தி ஏந்தி செவிலியர்கள் உறுதிமொழி ஏற்று விழிப்புணர்வு பேரணிய...

திருப்பத்தூர் TVK எம்.எல்.ஏ. சீனிவாச செதுபதி நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க Madras High Court தடை

திருப்பத்தூர் தொகுதியில் இரண்டு இடங்களில் ஒரே பெயர் இருப்பதால் DMK முன்னாள் அமைச்சர் K.R. பெரியகருப்பன் தாக்கல் செய்த மன...

வால்பாறையில் பயங்கர விபத்து: கார் மோதி பெண் படுகாயம்

கோவை மாவட்டம் வால்பாறையில் கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்து சென்ற பெண் மீது மோதி தூக்கி வீசிய சம்பவம் நடந்துள்ளது. படுகாய...