திருப்பூரில் புதுமைப்பெண் திட்டம் தொடக்கம் - 1783 மாணவிகளுக்கு வங்கி ஏ.டி.எம் கார்டுகள் விநியோகம்!

திருப்பூர் மாவட்டத்தில் இரண்டாம் கட்ட புதுமைப்பெண் திட்டம் இன்று தொடங்கப்பட்டது. இதையொட்டி, 1783 மாணவிகளுக்கு வங்கி ஏடிஎம் கார்டுகளை மாவட்ட ஆட்சியர் வினீத் வழங்கினார்.



திருப்பூர்: தமிழக அரசின் சார்பில் உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டத்தின்கீழ் புதுமைப்பெண் என்ற பெயரில் மாதம் ஆயிரம் ரூபாய், அவர்கள் கல்வி பயின்று முடிக்கும் வரையில் அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்தும் வகையில் திட்டம் தொடங்கப்பட்டது.



அதற்கான ஏடிஎம் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. ஏற்கனவே, திருப்பூர் மாவட்டத்தில் 2022-23 ஆம் ஆண்டில் 40 கல்லூரிகளில் இருந்து 3,657 மாணவிகளுக்கு இத்திட்டத்தின் கீழ் ஏடிஎம் கார்டுகள் வழங்கப்பட்டு வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு வரக்கூடிய சூழ்நிலையில், இன்று இரண்டாவது கட்டமாக 49 கல்லூரிகளில் இருந்து 1,783 மாணவிகளுக்கு இத்திட்டத்தின் கீழ் ஏடிஎம் கார்டுகள் வழங்கப்பட்டன.



இத்திட்டத்தினை மாவட்ட ஆட்சியர் வினீத், துணை மேயர் பாலசுப்பிரமணியம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாணவிகளுக்கான ஏடிஎம் கார்டுகளை வழங்கினர். இந்தத்திட்டத்தினை முடித்து வைத்து மேடையிலிருந்து இறங்கிய மாவட்ட ஆட்சியரிடம், முதலாம் ஆண்டு அரசு கல்லூரியை சேர்ந்த மாணவி ஒருவர் இத்திட்டத்தின் கீழ் துவங்கப்பட்ட வங்கி கணக்கில் ஆதார் எண் இணைப்பதில் இடையூறு ஏற்படுவதாக புகார் அளித்தார்.



அதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் வினீத் தனது கைபேசியிலேயே அதனை சரிபார்த்து நான்கு நாட்களுக்குள் அவை பரிசீலிக்கப்படும் எனவும், இல்லையென்றால் உரிய வங்கி அதிகாரிகளை தொடர்பு கொண்டு உடனுக்குடன் பிரச்சனையை சரிகொள்ள வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...