கோவை பாரதியார் பல்கலைகழகத்தால் வந்த சோதனை..! - புலம்பும் கோவை விவசாயி குடும்பம்!

கோவையில் ஜப்தி செய்யப்பட்ட பாரதியார் பல்கலைகழக பேருந்தை வீட்டின் முன் கடந்த 10 ஆண்டுகளாக நிறுத்தி வைத்திருக்கும் விவசாயி, அந்த பேருந்தை ஓட்டவும், விற்கவும் முடியாமல், இழப்பீடும் கிடைக்காமல் விவசாயி குடும்பம் வேதனை.


கோவை: நீதிமன்ற உத்தரவின்பேரில் ஜப்தி செய்யப்பட்ட பாரதியார் பல்கலைக்கழக பேருந்தை கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக வீட்டின் முன்பாக கோவை விவசாயி நிறுத்தி பராமரித்து வருகிறார்.

கோவையில் பாரதியார் பல்கலைகழகம் அமைப்பதற்காகக் கடந்த 1980ஆம் ஆண்டு மருதமலை சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து சுமார் 900 ஏக்கர் நிலம், அந்தந்த நிலம் உரிமையாளர்களிடமிருந்து பல்கலைகழகம் பெற்றது. அப்போது ஏக்கருக்கு ரூ.8,500 மட்டுமே வழங்கப்பட்டது.

மேலும் விவசாய பூமி என்பதால் விவசாய நில உரிமையாளர்களின் குடும்பத்தைச் சேர்ந்த நபர்களுக்கு அரசு வேலையும் வழங்கப்பட்டது. ஆனால் நிலத்திற்கு பல்கலைகழகம் கொடுத்த தொகை மிக குறைவான தொகை எனக்கூறி நில உரிமையாளர்கள் போராட துவங்கினர்.

மேலும் இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குகளும் போடப்பட்டன. இதில் தற்போது வடவள்ளியில் வசித்து வரும் முருகேசன், அவரது சகோதரர் மாரியப்பன் ஆகியோருக்கு சொந்தமான 4.5 ஏக்கர் நிலம் பல்கலைக்கழகத்திற்குக் கொடுக்கப்பட்டது.

இதற்கு உரிய தொகை வேண்டும் என இவர்களும் நீதிமன்றத்தை நாடினர். அதில் 1.5 ஏக்கருக்காக வழக்கு தனியாகவும் மற்ற மூன்று ஏக்கருக்கான வழக்கு தனியாகவும் போடப்பட்டது.



இந்நிலையில் 1.5 ஏக்கருக்கு உரிய நிதி வழங்க கோரிய வழக்கில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் பாரதியார் பல்கலைகழக பேருந்தை பறிமுதல் செய்து முருகேசன் சகோதரர்களிடம் ஒப்படைக்கவும், பணத்தை கொடுத்து விட்டு பேருந்தை பெற்றுச் செல்லவும் உத்தரவிட்டது.



இதையடுத்து அந்த பல்கலைகழக பேருந்து ஜப்தி செய்யப்பட்டு முருகேசனிடம் ஒப்படைக்கப்பட்டது.



முருகேசன், மாரியப்பன் சகோததரர்கள் கடந்த 10 ஆண்டுகளாக பல்கலைகழக பேருந்தை வீட்டின் முன்பு நிறுத்தி வைத்துள்ளனர். மேலும் இந்த பேருந்தை நிறுத்தி வைத்திருக்க வீட்டின் உரிமையாளர் எதிர்ப்பு தெரிவித்ததால், வேறு வீட்டிற்கு முருகேசன் குடும்பத்தினர் மாறியுள்ளனர்.

அவ்வாறு ஒவ்வொரு முறையும் வீடு மாற்றும் போது சுமார் 20 ஆயிரம் செலவு செய்து பேருந்தை மாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது.



ஜப்தி செய்த பேருந்தை ஓட்டவும் முடியாமல், விற்கவும் முடியாமல், இழப்பீடும் கிடைக்காமல் கூடுதல் செலவு செய்து வருவதாக குடும்பத்தின் வேதனை தெரிவிக்கின்றனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...