உதகையில் கடைகளுக்கு அதிகாரிகள் சீல் - வியாபாரிகள் போராட்டத்தால் பரபரப்பு!

உதகை மார்க்கெட் பகுதியில் உள்ள நகராட்சி கடைகளுக்கு வாடகை பாக்கி இருப்பதாகக் கூறி தொடர்ந்து சீல் வைத்து வரும் நகராட்சி அதிகாரிகளின் நடவடிக்கையைக் கண்டித்து வியாபாரிகள் சீல் வைத்த கடையின் முன் கருப்பு கொடியுடன் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.



நீலகிரி: உதகையில் 100-க்கும் மேற்பட்ட வியாபாரிகள், நகராட்சி கடைகளுக்கு முன்பாக கருப்பு கொடியுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நீலகிரி மாவட்டம் உதகை நகராட்சி தினசரி சந்தையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. கடந்த சில நாட்களாக வாடகை செலுத்தாத கடைகளுக்கு நகராட்சி நிர்வாகம் சீல் வைக்கும் நடக்கடிக்கையை மேற்கொண்டு வருகிறது.

இதனால் பெரும்பாலான கடைகளுக்கு 90 சதவீத வாடகை தொகை செலுத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள 10 சதவீத வாடகையை மார்ச் மாதம் இறுதிக்குள் செலுத்த வியாபாரிகள் கால அவகாசம் கேட்டுள்ளனர்.

அதற்கு நகராட்சி ஆணையர் ஒப்புக் கொண்டுள்ள நிலையில் குறைந்தபட்ச வாடகை தொகை நிலுவையில் வைத்துள்ள கடைகளைக் கண்டறிந்து அதிகாரிகள் சீல் வைத்து வருகின்றனர்.

குறிப்பாக நேற்று ஒரே இரவில் 30 கடைகளுக்குச் சீல் வைத்தனர்.



இதனால் ஆத்திரமடைந்த 100-க்கும் மேற்பட்ட வியாபாரிகள், சீல் வைப்பு நடவடிக்கையை உடனடியாக கைவிட வேண்டும் என்று கூறி சீல் வைத்த கடையின் முன் கருப்பு கொடியுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



இதனிடையே புதிய வாடகை முறையைத் தவணை முறையில் செலுத்தி வருவதாகவும், மார்ச் இறுதிக்குள் நிலுவையில் உள்ள வாடகையைச் செலுத்தி விடுவதாகக் கூறிய வியாபாரிகள், நகராட்சி சீல் வைக்கும் நடவடிக்கையைத் தொடர்ந்தால் கடையடைப்பு போராட்டம் நடத்தப் போவதாகவும் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...