கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 2 நாள் புத்தக கண்காட்சியில் பல்வேறு வகையான புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. இதில் மாணவர்கள், ஆசிரியர்கள் என ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று தேவையான புத்தங்களை வாங்கி சென்றனர்.
கோவை: கோவையில் உள்ள வேளாண் பல்கலைக்கழகத்தில் இரண்டு நாள் புத்தக கண்காட்சி நடைபெற்றது.
கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக மாணவர் நல மையத்தின் சார்பில் 2 நாள் புத்தகக் கண்காட்சி நேற்று (08.02.2023) துவங்கியது.

இந்த புத்தக கண்காட்சியை பல்கலைகழக துணை வேந்தர் முனைவர் கீதாலட்சுமி தொடங்கி வைத்தார்.

ஆண்டு தோறும் பல்கலைக்கழக நூலகத்தால் நடத்தப்படும் இந்த புத்தக கண்காட்சியில் நாடு முழுவதிலிருந்து வேளாண் புத்தக பதிப்பாளர்களும் விற்பனையாளர்களும் கலந்து கொண்டு தங்களது புத்தகங்களை காட்சிப்படுத்துவர்.
இந்தாண்டும் வேளாண்மை சம்பந்தப்பட்ட அறிவியல் பாடப் பிரிவுகள், பொது அறிவு, போட்டி தேர்வுகளுக்கான புத்தகங்கள் மற்றும் பல்வேறு புதுமை படைப்புகள் கண்காட்சியில் இடம் பெற்றிருந்தன.
இதில் பல்கலைக்கழக உயர் அதிகாரிகளும், பேராசிரியர்களும், மாணவர்களும் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தேவையான புத்தகங்களை தேர்ந்தெடுத்து சென்றனர்.
மேலும் பல்கலைக்கழக நூலகத்திற்குத் தேவையான புத்தகங்களை மாணவ மாணவியர்கள் மற்றும் பேராசிரியர்களின் பரிந்துரையின்படி பெறப்பட்டது.
இக்கண்காட்சியில் பெரும் திரளாக மாணவர்களும், பல்கலைக்கழக ஆசிரியப் பெருமக்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இப்புத்தக கண்காட்சியில் அனைத்து புத்தகங்களுக்கும் 20 சதவீதம் தள்ளுபடி அளிக்கப்படுகிறது.
இப்புத்தத கண்காட்சி பல்கலைக்கழத்தின் அனைத்து உறுப்பு கல்லூரிகளுக்கு பயனுள்ளதாக அமையும். குறிப்பாக இந்தாண்டு விளையாட்டு தொடர்பான நூல்களுக்கான தனி விற்பனையகம் அமைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக மாணவர் நல மையத்தின் சார்பில் 2 நாள் புத்தகக் கண்காட்சி நேற்று (08.02.2023) துவங்கியது.
இந்த புத்தக கண்காட்சியை பல்கலைகழக துணை வேந்தர் முனைவர் கீதாலட்சுமி தொடங்கி வைத்தார்.
ஆண்டு தோறும் பல்கலைக்கழக நூலகத்தால் நடத்தப்படும் இந்த புத்தக கண்காட்சியில் நாடு முழுவதிலிருந்து வேளாண் புத்தக பதிப்பாளர்களும் விற்பனையாளர்களும் கலந்து கொண்டு தங்களது புத்தகங்களை காட்சிப்படுத்துவர்.
இந்தாண்டும் வேளாண்மை சம்பந்தப்பட்ட அறிவியல் பாடப் பிரிவுகள், பொது அறிவு, போட்டி தேர்வுகளுக்கான புத்தகங்கள் மற்றும் பல்வேறு புதுமை படைப்புகள் கண்காட்சியில் இடம் பெற்றிருந்தன.
இதில் பல்கலைக்கழக உயர் அதிகாரிகளும், பேராசிரியர்களும், மாணவர்களும் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தேவையான புத்தகங்களை தேர்ந்தெடுத்து சென்றனர்.
மேலும் பல்கலைக்கழக நூலகத்திற்குத் தேவையான புத்தகங்களை மாணவ மாணவியர்கள் மற்றும் பேராசிரியர்களின் பரிந்துரையின்படி பெறப்பட்டது.
இக்கண்காட்சியில் பெரும் திரளாக மாணவர்களும், பல்கலைக்கழக ஆசிரியப் பெருமக்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இப்புத்தக கண்காட்சியில் அனைத்து புத்தகங்களுக்கும் 20 சதவீதம் தள்ளுபடி அளிக்கப்படுகிறது.
இப்புத்தத கண்காட்சி பல்கலைக்கழத்தின் அனைத்து உறுப்பு கல்லூரிகளுக்கு பயனுள்ளதாக அமையும். குறிப்பாக இந்தாண்டு விளையாட்டு தொடர்பான நூல்களுக்கான தனி விற்பனையகம் அமைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.