பசு அணைப்பு தின அறிவிப்பு வாபஸ் - இந்திய விலங்குகள் நல வாரியம் அறிக்கை

காதலர் தினத்தை பசு அரவணைப்பு தினமாக கொண்டாட வேண்டும் என விலங்கு நல வாரியம் வெளியிட்ட அறிவிப்புக்கு,மீம்ஸ்கள், விமர்சனங்கள் எழுந்ததால் பசு அணைப்பு தினத்தை வாபஸ்பெறுவதாக விலங்குகள் நல வாரியம் அறிவித்துள்ளது.


உலகெங்கும் பிப்ரவரி 14ஆம் தேதியன்று கொண்டாடப்படும் காதலர் தினத்தன்று `பசு அணைப்பு தினம்’ கொண்டாட வேண்டும் என இந்திய விலங்குகள் நல வாரியம் அறிக்கை ஒன்று வெளியிட்டிருந்தது. இதற்கு விமர்சனங்களும், கடுமையான எதிர்ப்புகளும் கிளம்பியது.

இந்நிலையில் பிப்ரவரி 14ஆம் தேதி பசு அரவணைப்பு தினமாக கொண்டாட வேண்டும் என்று வெளியிட்ட அறிவிப்பை திரும்ப பெறுவதாக இந்திய விலங்குகள் நல வாரியம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக இந்திய விலங்குகள் நல வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், உலகெங்கும் காதலர் தினமாக கொண்டாடும் பிப்.14ஆம் தேதியில், 'பசு அணைப்பு தினம்'கொண்டாட வேண்டும் என வெளியிட்ட அறிவிப்பை சம்பந்தப்பட்ட அதிகாரி மற்றும் மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சகத்தின் உத்தரவின்படி, பிப்ரவரி 14 அன்று பசு அணைப்பு தினத்தை கொண்டாட, இந்திய விலங்குகள் நல வாரியம் வெளியிட்ட சுற்றறிக்கை திரும்பப் பெறப்படுகிறது என விலங்குகள் நல வாரிய செயலாளர் எஸ்.கே.தத்தா கூறியுள்ளார்.

Newsletter

பட்டாசு, இனிப்பு, கோஷங்கள்.. ! கோவையில் களைகட்டிய த.வெ.க வெற்றி விழா

தமிழக முதலமைச்சராக தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் ஜோசப் விஜய் பதவியேற்றதைத் தொடர்ந்து, கோவையின் பல்வேறு பகுதிகளில் த.வெ....

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...