கோவை மாநகராட்சி பணிகளை நேரில் ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையர்

கோவை மாநகராட்சிக்குட்பட்ட மத்திய மண்டலம் வார்டு எண்.32-க்குட்பட்ட வேலம்மாள் நகர் பகுதியில் ரூ.28 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் நகர்நல மைய கட்டுமானப்பணியினை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் நேரில் பார்வையிட்டு ஆய்வு.


கோவை: கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் பணிகளை விரைந்து முடிக்க கோரி அதிகாரிகளுக்கு ஆணையாளர் பிரதாப் உத்தரவிட்டுள்ளார்.



கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.32-க்குட்பட்ட வேலம்மாள் நகர் பகுதியில் ரூ.28 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுவரும் நகர்நல மைய கட்டுமானப்பணியினை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, பணியினை விரைவாகவும், தரமாகவும் செய்து முடித்து விரைவில் பயன்பாட்டிற்குக் கொண்டுவரச் சம்பந்தப்பட்ட பொறியாளருக்கு உத்தரவிட்டார்.



அதனைத் தொடர்ந்து, மத்திய மண்டலம் வார்டு எண்.31-க்குட்பட்ட காமராஜபுரம் பகுதியில் 24X7 குடிநீர் திட்டப்பணிகள் குறித்தும் மாநகராட்சி ஆணையாளர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, குடிநீர் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அலுவலருக்கு உத்தரவிட்ட பின்பு,



காமராஜபுரம் பகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள பொது விநியோகக்கடையினை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து,



அப்பகுதியிலுள்ள அங்கன்வாடி மையத்தையும் நேரில் பார்வையிட்டு, அங்கன்வாடி மையத்திற்கு அடிப்படை வசதிகள் செய்துதரப் பொறியாளருக்கு அறிவுறுத்தி, குழந்தைகளுடன் கலந்துரையாடிய பின்பு, அப்பகுதியிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற சம்பந்தப்பட்ட அலுவலருக்கு உத்தரவிட்டார்.



பின்னர், வார்டு எண்.49-க்குட்பட்ட பாப்பநாயக்கன்பாளையம், பொன்னையா நகர் பகுதியில் SRP திட்டத்தின்கீழ் ரூ.53.54 லட்சம் மதிப்பீட்டில் 607 மீட்டர் அப்பகுதியிலுள்ள தொலைவிற்கு அமைக்கப்பட்டுள்ள மழைநீர் வடிகாலில் உள்ள தார் சாலையினையும், குப்பைகளையும் அகற்றி உடனடியாக தூர்வார சம்பந்தப்பட்ட அலுவலருக்கு உத்தரவிட்டார்.



அதனைத் தொடர்ந்து, வார்டு எண்.64-க்குட்பட்ட புளியகுளம், ஜெயநாதன் வீதியில் தமிழ்நாடு நிலையான நகர்ப்புற சாலைகள் மேம்பாட்டுத்திட்டம் (TURIP 2022-2023) பேஸ்-1கீழ் 200 மீட்டர் நீளத்திற்கு தார் சாலை பணிகள் நடைபெற்றுவருவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளை விரைவசாகவும், தரமாகவும் செய்து முடித்து பயன்பாட்டிற்குக் கொண்டுவரச் சம்மந்தப்பட்ட பொறியாளர்களுக்கு உத்தரவிட்டார்.



பின்னர், வார்டு எண்.66-க்குட்பட்ட பந்தைய சாலை, டீ-எஸ்டேட் மற்றும் ஏ.டி.டி. சாலை சாலை பகுதிகளில் 24 மணி நேர குடிநீர் திட்டத்தின்கீழ் வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு பணிகள் நடைபெற்றுவருவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, பணியினை விரைந்து முடித்து, அப்பகுதிகளில் உடனடியாக தார்சாலை அமைக்கும் பணிகளை மேற்கொள்ள சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப் உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின்போது, மாமன்ற உறுப்பினர்கள் முருகன், பார்த்திபன், உதவி ஆணையர் மகேஷ்கனகராஜ், உதவி செயற்பொறியாளர் புவனேஸ்வரி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...