தாராபுரத்தில் பழைய மார்க்கெட் இடிக்கும் பணி தீவிரம்

தாராபுரத்தில் பழைய மார்க்கெட் வணிக வளாகத்தை இடித்து விட்டு புதிய வளாகம் கட்டுவதற்காக ஆய்வு மேற்கொண்டு வரும் நிலையில், பழைய கட்டிடத்தை அதிகாரிகள் இடித்து அப்புறப்படுத்தி வருகின்றனர்.



திருப்பூர்: தாராபுரம் தினசரி மார்கெட் பகுதியில் ரூ.2.03 கோடி செலவில் புதிய வணிக வளாகம் கட்டப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தினசரி மார்க்கெட் பகுதியில் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் சிரமத்துடன் வந்து காய்கறிகளை வாங்கி செல்கின்றனர். இதனை கருத்தில் கொண்ட நகராட்சி நிர்வாகம், அனைத்து உறுப்பினர்கள் ஒத்துழைப்போடு புதிய வணிக கட்டிடம் கட்ட அரசிடமிருந்து நிதி பெறப்பட்டது.

இதற்கான பணிகள் கூடிய விரைவில் தொடங்கி புதிய வணிக வளாகம் ரூ.2.03 கோடி செலவில் அமைக்கப்பட்ட உள்ளது. தினசரி மார்க்கெட்டில் புதிய வணிக வளாகம் கட்டப்படவுள்ளதால், வியாபாரிகள் நலன் கருதி வேறு இடத்துக்கு மாற்றுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அதிகாரிகளுடன், நகராட்சி தலைவர் கு.பாப்பு கண்ணன் ஆய்வு செய்தார்.



அதன்படி பழைய மார்க்கெட் வேறு இடத்துக்கு மாற்றம் செய்யப்பட்டு கடந்த 2 நாட்களாகப் பழைய கட்டிடத்தை இடிக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.



Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...