பல்லடம் அருகே தனியார் மில்லில் திடீர் தீ விபத்து - பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீக்கிரையாகின

பல்லடம் அடுத்த முத்தாண்டி பாளையம் பகுதியில் செயல்பட்டு வந்த தனியார் நூற்பாலையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில், நூல்கள், பஞ்சுகள் என பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சேதமாகின.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே தனியார் நூற்பாலையில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகி சேதமாகின.



பல்லடம் அருகேயுள்ள முத்தாண்டிபாளையம் கிராமத்தில் பிரபாகரன் என்பவருக்கு சொந்தமான எஸ்.பி.ஆர் தனியார் நூற்பாலை இயங்கி வருகிறது. இன்று பிற்பகல் 2 மணி அளவில் திடீரென இந்த நூற்பாலையில் தீ விபத்து ஏற்பட்டது.



நூற்பாலையில் இருந்து புகை வெளியேறுவதை கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதன் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர், போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த தீ விபத்தில் நூற்பாலையில் இருந்த நூல்கள், பஞ்சுகள் என அனைத்தும் கருகி சேதமடைந்துள்ளன. மேலும் மீதமூள்ள நூல் மற்றும் பொருட்களை தொழிலாளர்கள் பத்திரமாக வெளியேற்றினர்.

நூற்பாலை முழுவதும் ஏற்பட்ட இந்த தீவிபத்தில், லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதம் அடைந்துள்ளன.

மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா அல்லது தீ விபத்துக்கான காரணம் என்ன குறித்து பல்லடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...

இந்தியா-நியூசிலாந்து FTA: ஜவுளித் துறைக்கு புதிய வாய்ப்பு

இந்தியா-நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை சைமா வரவேற்று, ஜவுளி ஏற்றுமதி, புதிய சந்தை அணுகல் மற்றும் வளர்ச்சி வாய்...

மேட்டுப்பாளையம்: புதிய ரயில்கள், சேவை நீட்டிப்பு; வந்தே பாரத் மேட்டுப்பாளையம் வரை நீட்டிப்பு?

மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து புதிய ரயில் சேவைகள் மற்றும் நீட்டிப்புகளை தெற்கு ரயில்வே முன்மொழிந்து, சுற்றுலா...

எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாட்டால் கோவை தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் முடக்கம்

கோவையில் எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வழக்க...

கோடைக்காலம்: போத்தனூர் வழித்தடத்தில் மங்களூரு-சென்னை சிறப்பு ரயில் இயக்கம்

கோடைக்காலத்தை முன்னிட்டு கர்நாடகா மாநிலம் மங்களூரில் இருந்து சென்னை எழும்பூர்க்கு போத்தனூர் வழித்தடத்தில் சிறப்பு ரயில்...