உடுமலையில் நகராட்சிக்கு சொந்தமான ரூ.15 கோடி நிலம் மீட்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் நகராட்சிக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தை உரிமையாளர் ஒப்படைக்காமல் இருந்த நிலையில், ரூ.15 கோடி மதிப்பிலான நிலத்தை நகராட்சி அதிகாரிகள் மீட்டுள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் நகராட்சிக்கு சொந்தமான ரூ.15 கோடி மதிப்பிலான நிலத்தை அதிகாரிகள் மீட்டனர்.

உடுமலை நகராட்சி பழனி சாலைக்கு அருகில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான நிலத்தில் கல்யாணி அம்மாள் லே அவுட் அமைந்துள்ளது. இங்கு நகர ஊரமைப்பு துறையால் ஒப்புதல் அளிக்கப்பட்டு 10.31 ஏக்கர் பரப்பளவில் உருவான மனைப்பிரிவின் நிலப்பரப்பில் குறிப்பிட்ட அளவு நிலம் பொது பயன்பாட்டிற்கு ஒதுக்கப்பட்டது.

அந்த வகையில் 76.61 சென்ட் சமுதாய நலக் கூடத்திற்கும், 11.69 சென்ட் வாசகர் அறை பயன்பாட்டிற்கும் ஒதுக்கப்பட்டு வகைப்பாடு செய்யப்பட்டது. இந்த இடத்தை அதன் உரிமையாளர் நகராட்சிக்கு ஒப்படைக்காமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.



இந்த இடத்தை நகராட்சியால் சுவாதீன படுத்தப்பட்டு பெயர் பலகை வைக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் யாரும் இந்த இடங்களை கிரயம் செய்ய வேண்டாம் என நகராட்சி அறிவுறுத்தி உள்ளது. இந்த இடத்தின் மொத்த மதிப்பு ரூ.15 கோடி ஆகும்.



இதுபோல உடுமலை நகராட்சியால் மனை பிரிவுகளில் ஒதுக்கப்பட்ட பொது ஒதுக்கீடு இடங்கள் ஒப்படைக்காமல் இருந்ததால் அவற்றை சுவாதீனப்படுத்த நகராட்சி நிர்வாகம் மூலம் தொடர்ந்து நடவடிக்கை எடுக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...