உடுமலையில் நகராட்சிக்கு சொந்தமான ரூ.15 கோடி நிலம் மீட்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் நகராட்சிக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தை உரிமையாளர் ஒப்படைக்காமல் இருந்த நிலையில், ரூ.15 கோடி மதிப்பிலான நிலத்தை நகராட்சி அதிகாரிகள் மீட்டுள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் நகராட்சிக்கு சொந்தமான ரூ.15 கோடி மதிப்பிலான நிலத்தை அதிகாரிகள் மீட்டனர்.

உடுமலை நகராட்சி பழனி சாலைக்கு அருகில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான நிலத்தில் கல்யாணி அம்மாள் லே அவுட் அமைந்துள்ளது. இங்கு நகர ஊரமைப்பு துறையால் ஒப்புதல் அளிக்கப்பட்டு 10.31 ஏக்கர் பரப்பளவில் உருவான மனைப்பிரிவின் நிலப்பரப்பில் குறிப்பிட்ட அளவு நிலம் பொது பயன்பாட்டிற்கு ஒதுக்கப்பட்டது.

அந்த வகையில் 76.61 சென்ட் சமுதாய நலக் கூடத்திற்கும், 11.69 சென்ட் வாசகர் அறை பயன்பாட்டிற்கும் ஒதுக்கப்பட்டு வகைப்பாடு செய்யப்பட்டது. இந்த இடத்தை அதன் உரிமையாளர் நகராட்சிக்கு ஒப்படைக்காமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.



இந்த இடத்தை நகராட்சியால் சுவாதீன படுத்தப்பட்டு பெயர் பலகை வைக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் யாரும் இந்த இடங்களை கிரயம் செய்ய வேண்டாம் என நகராட்சி அறிவுறுத்தி உள்ளது. இந்த இடத்தின் மொத்த மதிப்பு ரூ.15 கோடி ஆகும்.



இதுபோல உடுமலை நகராட்சியால் மனை பிரிவுகளில் ஒதுக்கப்பட்ட பொது ஒதுக்கீடு இடங்கள் ஒப்படைக்காமல் இருந்ததால் அவற்றை சுவாதீனப்படுத்த நகராட்சி நிர்வாகம் மூலம் தொடர்ந்து நடவடிக்கை எடுக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

Newsletter

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...

கோவையில் பட்டபகலில் கார் மீது கல்வீச்சு தாக்குதல் - சிசிடிவி காட்சி வெளியானது

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் மீது ஹெல்மெட் அணிந்த நபர் பட்டபகலில் கல்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் மற்றும் முருங்கை மதிப்பூட்டு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஏப்ரல் 28, 29 ஆகிய தேதிகளில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்டப்ப...