“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டுமே திமுகவால் ஒதுக்கப்பட்டுள்ளதாக கோவை விமான நிலையத்தில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.


கோவை: கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன், தமிழகத்தில் அதிகரித்து வரும் மின்சார தேவைக்கேற்ப தேவையான மின்கட்டமைப்பு வசதிகளை கடந்த தி.மு.க அரசு உருவாக்கத் தவறிவிட்டதாக குற்றம்சாட்டினார்.

மின்வெட்டு தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். சென்னையில் 3,500 மெகாவாட் மின்சாரத்தை மட்டுமே கையாளும் திறன் உள்ள நிலையில், தற்போது 5,000 மெகாவாட் மின்சாரம் பயன்படுத்தப்படுவதாகவும் கூறினார்.

அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்ட கட்டமைப்புகளை நம்பியே கடந்த தி.மு.க ஆட்சி செயல்பட்டதாகவும், கூடுதலாக போதிய பணிகள் மேற்கொள்ளப்படவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

மேகதாது அணை விவகாரம் குறித்து பேசிய அவர், மேகதாது அணை கட்டக்கூடாது என்ற நிலைப்பாட்டில் தமிழக முதல்வர் உறுதியாக இருப்பதாகவும், தமிழகத்தின் உரிமைக் குரலை பிரதமருக்கு கடிதங்கள் மூலம் தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும் தெரிவித்தார். காவிரி நீர் விவகாரத்திலும், கர்நாடகா தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நீரை வழங்க வேண்டும் என முதல்வர் வலியுறுத்தியுள்ளதாக கூறினார்.

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைவாக இருப்பதால், போதிய நீர் கிடைத்த பிறகே அணை திறக்கப்படும் என பொறியாளர்கள் தெரிவித்துள்ளதாக அவர் கூறினார்.

இடைத்தேர்தல் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில் எந்த முடிவையும் தெரிவிக்க முடியாது. தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு அந்தத் தொகுதியில் யாரை வேட்பாளராக நிறுத்துவது என்பது கட்சித் தலைவர் விஜய் முடிவு செய்வார். இதுதொடர்பாக பனையூரில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றதாகவும் தெரிவித்தார்.

சேலத்தில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகி மீது முன்வைக்கப்பட்ட பாலியல் குற்றச்சாட்டு தொடர்பான கேள்விக்கு பதியளித்த அவர், எந்த குற்றச்சாட்டாக இருந்தாலும் விசாரணைக்குப் பின்னரே நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், ஊடகச் செய்திகளின் அடிப்படையில் கருத்து தெரிவிக்க முடியாது என்றும் கூறினார்.

கர்நாடக மாநிலத்தில் உள்ள மூகாம்பிகை கோவிலுக்கு விஜய் சென்றது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், ஆலயங்களுக்கு அனைவரும் செல்வது இயல்பான ஒன்று என்றும், அதேபோல் விஜயும் சென்றுள்ளதாக தெரிவித்தார்.

மேலும், "சினிமா பிரபலங்கள் 70 ஆண்டுகளாக ஆட்சி செய்கிறார்கள் என்று கூறுபவர்கள், ஆந்திரப் பிரதேசத்தின் துணை முதல்வர் யார் என்பதை நினைத்து பார்க்க வேண்டும்" என்றும் குறிப்பிட்டார்.

அதேபோல், மாணவிகளுக்கான "சிங்கப்பெண் படை" திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அதை படிப்படியாக விரிவுபடுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...