திருப்பூர் உடுமலை அருகே சாலை விரிவாக்க பணி காரணமாக போக்குவரத்து மாற்றம்!

உடுமலை அருகே பொள்ளாச்சி - திண்டுக்கல் சாலை நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யும் பணிகள் காரணமாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே சாலை விரிவாக்க பணியின் காரணமாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உடுமலை அருகே பொள்ளாச்சி - திண்டுக்கல் இடையே நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி துரித கதியில் நடைபெற்று வருகிறது. இந்த வழித்தடத்தில் ஆங்காங்கே நீர்வழித்தடங்களில் மேம்பாலம் அமைக்கின்ற பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

பாலங்கள் கட்டும் பணியின் போது தற்காலிக சாலை அமைத்து, அதில் போக்குவரத்து தொடர்ந்து வருகிறது. மடத்துக் குளத்தில் இருந்து கணியூர், காரத்தொழுவு வழித்தடத் தில் வாகன ஓட்டிகள் தாராபுரம், கரூர் மேலும் திருச்சி வரை சென்று வருகின்றனர்.



முக்கிய வழித்தடமாக இந்த சாலையில் சோழமாதேவி மேடு அருகே உயர்மட்ட பாலம் கட்டும் பணியானது வேகமாக நடைபெற்று வருகிறது. பாலம் கட்டும் பணிக்காக அருகிலேயே தற்காலிக சாலை அமைக்கப்பட்டுள்ளதால் போக்குவரத்து தற்காலிக பாதை வழியே சென்று வருகிறது.



இருப்பினும் போக்குவரத்து நெரிசல் இன்றி தொடர மடத்துக்குளம் கழுகரையில் இருந்து பிரிந்து வேடப்பட்டி கிராமம் வழியாக கணியூர், காரத்தொழுவு சென்று செக்கான் ஓடை பகுதியில் மீண்டும் பழைய சாலையில் பயணிக்கும் வகையில் போக்குவரத்து மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது.

இது குறித்த அறிவிப்பு பலகையை நெடுஞ்சாலை துறையினர் வைத்துள்ளனர். போக்குவரத்து மாற்றி அமைக்கப்பட்டதால் வாகன ஓட்டிகள் கழுகரையில் பிரிந்து மீண்டும் செக்கான் ஓடை வரை உள்ள மாற்று வழித்தடத்தில் பயணித்து வருகின்றனர்.

Newsletter

கோவை கண்ணப்பநகரில் அண்ணாமலை தீவிர தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியின் கண்ணப்பநகர் பகுதியில் தமிழக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் K.Annamalai, அதிமுக கோவை வடக்...

பாஜக மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி

கோவை வடக்கு தொகுதியில் போட்டியிடும் பாஜக மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன், தீவிர பிரச்சாரத்தால் ஏற்பட்ட காலில் வலி மற்று...

மூலப்பொருட்கள் விலை உயர்வால் பவுண்டரி பொருட்களின் விலை 10 சதவீதம் உயர்த்த 'காஸ்மாபேன்' சங்கம் முடிவு

மூலப்பொருட்கள் விலை உயர்வால் பவுண்டரி தொழிலில் உற்பத்தி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் பவுண்டரி உற்பத்தி பொருட்க...

மூலப்பொருட்கள் விலை உயர்வால் பவுண்டரி பொருட்களின் விலை 10 சதவீதம் உயர்த்த 'காஸ்மாபேன்' சங்கம் முடிவு

மூலப்பொருட்கள் விலை உயர்வால் பவுண்டரி தொழிலில் உற்பத்தி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் பவுண்டரி உற்பத்தி பொருட்க...

தொண்டாமுத்தூர்: திமுக வேட்பாளர் என்.ஆர். கார்த்திகேயன் வெற்றிக்காக கட்சியினர் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் – செந்தில் பாலாஜி

தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற செயல்வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கூட்டத்தில், கூட்டணிக் கட்சிகளின் நிர்வ...

வால்பாறை: திமுக வேட்பாளருக்கு ஆதரவு கோரி டாக்டர் மகேந்திரன் பரப்புரை..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் குட்டி என்கிற ஆ. சுதாகருக்கு ஆதரவு கோரி, பொள்ளாச்சி மற்றும் வால்பாறை தேர்தல்...