நீலகிரி முதுமலை தெப்பக்காடு பகுதியில் உலா வந்த புலி - பொதுமக்கள் அச்சம்!

முதுமலை தெப்பக்காடு பகுதியில் சமீபத்தில் பெண் ஒருவரை புலி அடித்து கொன்ற நிலையில், தெப்பக்காடு ஆற்றங்கரையோரத்தில் புலி ஒன்று உலா வந்ததை கண்ட பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.



நீலகிரி: நீலகிரி மாவட்டம் முதுமலை தெப்பக்காடு பகுதியில் உலா வந்த புலியால் கிராம மக்கள் அச்சமடைந்தனர்.

முதுமலை தெப்பக்காடு அடுத்த யானைபாடி பகுதியை சேர்ந்த மாரி என்ற பெண்மணி வனப்பகுதியில் விறகு சேகரிக்க சென்ற போது, புலி தாக்கி கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தெப்பக்காடு, யானைப்பாடி பகுதியில் புலியை கண்காணிக்க 20க்கும் மேற்பட்ட இடங்களில் வனத்துறையினர் தானியங்கி கேமராக்களை பொருத்தி கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையில், அப்பகுதியில் 4 புலிகள் நடமாடுவது கேமராவில் பதிவான நிலையில் பெண்ணை தாக்கிய புலி எது என கண்டறிய வனத்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.



இதனிடையே நேற்று மாலை தெப்பக்காடு ஆற்றங்கரையோரம் புலி உலா வந்ததுள்ளது. இதை கண்ட கிராமத்தினர் பெண்ணை தாக்கிய புலியாக இருக்கலாம் என மிகுந்த அச்சமடைந்துள்ளனர்.

இந்நிலையில், புலா உலா வந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...