கோவையில் அருவி வாசகர் வட்டம் சார்பில் கவிதை போட்டி: வெற்றி பெற்ற கவிஞர்களுக்கு ரொக்கப் பரிசுகள்!

கோவையில் அருவி வாசகர் வட்டம் சார்பில் கல்லூரிகளுக்கு இடையே நடைபெற்ற கவிதை போட்டியில் வெற்றி பெற்று முதல் 4 இடங்களை பிடித்த மாணவ - மாணவிகளுக்கு சிறப்பு விருந்தினர்கள் ரொக்கப் பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினர்.


கோவை: கோவையில் அருவி வாசகர் வட்டம் சார்பில் நடைபெற்ற கவிதை போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ரொக்கப்பரிசுகள் வழங்கப்பட்டன.

கோவையில் உள்ள அருவி வாசகர் வட்டம் சார்பில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (12.02.2023) மாநில அளவிலான கல்லூரிகளுக்கு இடையேயான தமிழ் கவிதைப் போட்டி நடைபெற்றது. இந்த கவிதை போட்டியில், பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

இந்த போட்டியில், சி.எம்.எஸ் கல்வியியல் கல்லூரி மாணவர் பிரகாஷ்ராஜ்-க்கு முதல் பரிசாக ரூ.2,500 வழங்கப்பட்டது. அதேபோல் தென்காசி குற்றாலம் ஸ்ரீ பராசக்தி மகளிர் கல்லூரியை சேர்ந்த மாணவி கிருஷ்ணம்மாளுக்கு 2ஆம் பரிசாக ரூ.1,500 வழங்கப்பட்டது.

மேலும், பி.எஸ்.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியைச் சேர்ந்த ரிதன்யா சாருமதிக்கு மூன்றாம் பரிசாக ரூ.500, அதே பி.எஸ்.ஜி கல்லூரியை சேர்ந்த சுந்தருக்கு 4ஆவது பரிசாக ரூ.250 வழங்கப்பட்டது.



தொடர்ந்து இந்த கவிதை போட்டியில் மேடையில் தங்கள் கவிதைகளை வாசித்த அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் சான்றிதழ்கள் மற்றும் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட கவிஞர் முனைவர் மு. நாகராஜன் சிறப்புரையாற்றினார். அவர் தனது உரையில், சமகால சமூக-அரசியல் பிரச்சினைகளை வாசகர்களுக்கு தெளிவாகப் புரிந்துகொள்ளும் கவிதைகள் மட்டுமே தலைமுறைகளை கடந்து செல்லும் என்று வலியுறுத்தினார்.

இந்த நிகழ்ச்சியில் அருவி வாசகர் வட்டத்தைச் சேர்ந்த ராம்குமார் அனைவரையும் வரவேற்றார், இந்த விழாவை சக்தி ஒருங்கிணைத்தார்.

Newsletter

கோவை கண்ணப்பநகரில் அண்ணாமலை தீவிர தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியின் கண்ணப்பநகர் பகுதியில் தமிழக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் K.Annamalai, அதிமுக கோவை வடக்...

பாஜக மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி

கோவை வடக்கு தொகுதியில் போட்டியிடும் பாஜக மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன், தீவிர பிரச்சாரத்தால் ஏற்பட்ட காலில் வலி மற்று...

மூலப்பொருட்கள் விலை உயர்வால் பவுண்டரி பொருட்களின் விலை 10 சதவீதம் உயர்த்த 'காஸ்மாபேன்' சங்கம் முடிவு

மூலப்பொருட்கள் விலை உயர்வால் பவுண்டரி தொழிலில் உற்பத்தி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் பவுண்டரி உற்பத்தி பொருட்க...

மூலப்பொருட்கள் விலை உயர்வால் பவுண்டரி பொருட்களின் விலை 10 சதவீதம் உயர்த்த 'காஸ்மாபேன்' சங்கம் முடிவு

மூலப்பொருட்கள் விலை உயர்வால் பவுண்டரி தொழிலில் உற்பத்தி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் பவுண்டரி உற்பத்தி பொருட்க...

தொண்டாமுத்தூர்: திமுக வேட்பாளர் என்.ஆர். கார்த்திகேயன் வெற்றிக்காக கட்சியினர் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் – செந்தில் பாலாஜி

தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற செயல்வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கூட்டத்தில், கூட்டணிக் கட்சிகளின் நிர்வ...

வால்பாறை: திமுக வேட்பாளருக்கு ஆதரவு கோரி டாக்டர் மகேந்திரன் பரப்புரை..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் குட்டி என்கிற ஆ. சுதாகருக்கு ஆதரவு கோரி, பொள்ளாச்சி மற்றும் வால்பாறை தேர்தல்...