உடுமலை அரசுப்பள்ளியில் தமிழ் கண்காட்சி - பார்வையாளர்கள் உற்சாகம்!

உடுமலை அருகே சோமவாரப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாணவர்களின் கலைத்திறனை வெளிப்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட தமிழ் கண்காட்சியில் வைக்கப்பட்ட படைப்புகளை பார்த்து பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே குடிமங்கலம், சோமவாரப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், மாணவர்களின் கைத்திறன்களையும், கலைநயத்தையும் தமிழுடன் சேர்த்து வெளிப்படுத்தும் வகையிலான தமிழ் கண்காட்சி நடந்தது.



பள்ளித் தலைமை ஆசிரியர் கோப்பெருந்தேவி கண்காட்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார். ஆசிரியர்கள் அனைவரும், வகுப்பு மாணவர்களை ஊக்குவித்து, தமிழ் பழமையை போற்றும் புதிய படைப்புகள் கண்காட்சியில் வைக்கப்பட்டது.



சங்க இலக்கியங்கள், பக்தி இலக்கியங்கள், மூவேந்தர்களின் வீரம், கால்நடை வளர்ப்பு, விவசாயம், பாரம்பரிய உணவு தானியங்கள், வீரப்பெண்கள், கோவில்களின் சிறப்பு, வரலாற்று சிறப்புமிக்க கட்டமைப்புகள், கவிஞர்கள், புலமை, பாட்டுகள் உள்ளிட்ட பல்வேறு படைப்புகளை சார்ட்களாகவும், படைப்புகளாகவும் புதுவிதமாக காட்சிப்படுத்தினர்.



இயல், இசை, நாடகத்தமிழை கண்முன் விருந்தளிந்து பார்வையாளர்களை கவர்ந்தனர். இந்தக் கண்காட்சியை, பொள்ளாச்சி எம்.பி., சண்முகசுந்தரம் உடுமலை தமிழிசை சங்கத்தினர், பெதப்பம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள், கல்லுாரி மாணவர்கள், பள்ளி மாணவர்களின் பெற்றோர் உட்பட பலர் ஆர்வத்துடன் பார்த்து ரசித்தனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...