உடுமலை அரசுப்பள்ளியில் தமிழ் கண்காட்சி - பார்வையாளர்கள் உற்சாகம்!

உடுமலை அருகே சோமவாரப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாணவர்களின் கலைத்திறனை வெளிப்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட தமிழ் கண்காட்சியில் வைக்கப்பட்ட படைப்புகளை பார்த்து பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே குடிமங்கலம், சோமவாரப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், மாணவர்களின் கைத்திறன்களையும், கலைநயத்தையும் தமிழுடன் சேர்த்து வெளிப்படுத்தும் வகையிலான தமிழ் கண்காட்சி நடந்தது.



பள்ளித் தலைமை ஆசிரியர் கோப்பெருந்தேவி கண்காட்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார். ஆசிரியர்கள் அனைவரும், வகுப்பு மாணவர்களை ஊக்குவித்து, தமிழ் பழமையை போற்றும் புதிய படைப்புகள் கண்காட்சியில் வைக்கப்பட்டது.



சங்க இலக்கியங்கள், பக்தி இலக்கியங்கள், மூவேந்தர்களின் வீரம், கால்நடை வளர்ப்பு, விவசாயம், பாரம்பரிய உணவு தானியங்கள், வீரப்பெண்கள், கோவில்களின் சிறப்பு, வரலாற்று சிறப்புமிக்க கட்டமைப்புகள், கவிஞர்கள், புலமை, பாட்டுகள் உள்ளிட்ட பல்வேறு படைப்புகளை சார்ட்களாகவும், படைப்புகளாகவும் புதுவிதமாக காட்சிப்படுத்தினர்.



இயல், இசை, நாடகத்தமிழை கண்முன் விருந்தளிந்து பார்வையாளர்களை கவர்ந்தனர். இந்தக் கண்காட்சியை, பொள்ளாச்சி எம்.பி., சண்முகசுந்தரம் உடுமலை தமிழிசை சங்கத்தினர், பெதப்பம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள், கல்லுாரி மாணவர்கள், பள்ளி மாணவர்களின் பெற்றோர் உட்பட பலர் ஆர்வத்துடன் பார்த்து ரசித்தனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...