வால்பாறை அருகேயுள்ள தாய்முடி எஸ்டேட் என்.சி பிரிவில் குடியிருந்து வரும் பழனிசாமி என்பவர், இன்று தேயிலை தோட்டத்தில் வேலை செய்து விட்டு, வீட்டிற்குத் திரும்பும் போது, காட்டெருமை அவரை தாக்கியதில் தலை மற்றும் கண்ணில் லேசான காயம் ஏற்பட்டது.
கோவை: வால்பாறை அருகே தேயிலைத் தோட்டத்தில் தொழிலாளியை காட்டெருமை தாக்கியதில் காயமடைந்தார்.
கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் வால்பாறை அருகே தாய்முடி எஸ்டேட் என் சி பிரிவில் குடியிருந்து வருபவர் பழனிசாமி(54).
இவர் இன்று தேயிலைத் தோட்டத்தில் வேலை முடித்து விட்டு, வீட்டிற்கு நடந்து வந்துள்ளார். அப்பொழுது அங்கு எதிர்பாராத விதமாக வந்த காட்டெருமைகள், பழனிசாமியை தாக்கியுள்ளது. இதில் அவருக்கு தலை மற்றும் கண்ணில் லேசான காயம் ஏற்பட்டது.

அருகிலிருந்த சக தொழிலாளர்கள் பழனிசாமியை மீட்டு எஸ்டேட் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தனர்.

பின்னர் மேல்சிகிச்சைக்காக வால்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் வால்பாறை அருகே தாய்முடி எஸ்டேட் என் சி பிரிவில் குடியிருந்து வருபவர் பழனிசாமி(54).
இவர் இன்று தேயிலைத் தோட்டத்தில் வேலை முடித்து விட்டு, வீட்டிற்கு நடந்து வந்துள்ளார். அப்பொழுது அங்கு எதிர்பாராத விதமாக வந்த காட்டெருமைகள், பழனிசாமியை தாக்கியுள்ளது. இதில் அவருக்கு தலை மற்றும் கண்ணில் லேசான காயம் ஏற்பட்டது.
அருகிலிருந்த சக தொழிலாளர்கள் பழனிசாமியை மீட்டு எஸ்டேட் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தனர்.
பின்னர் மேல்சிகிச்சைக்காக வால்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.