தாராபுரத்தில் உள்ள தென்தாரை ஸ்ரீசின்னக்காளியம்மன் கோயிலில் தமிழகத்தில் நல்ல மழை பெய்து, கோடைவெயிலின் தாக்கம் குறைந்திடவும், அனைத்து உயிர்களுக்கும் தட்டுப்பாடு இல்லாமல் குடிதண்ணீர் கிடைக்ககோரி பஜனை பாடல்களுடன் தீப அலங்காரம் நடைபெற்றது.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் தென்தாரை அருள்மிகு ஸ்ரீ, சின்னக்காளி காளியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு 8வது ஆண்டாக 108 குத்துவிளக்கு 'பூஜை நடைபெற்றது.
சின்ன காளியம்மன் கோயில் வளாகத்தில் நடைபெற்ற குத்து விளக்கு பூஜைக்கு ராஜா (என்ற) கோவிந்தசாமி தலைமை வகித்தார். வ.உ.சி. பேரவைத்தலைவர் உலகநாதன், மணிகண்டன், சிவா, கார்த்தி, பாலு, சரவணன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் 200க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். குத்து விளக்கு பூஜையில் உலகில் அன்பு அமைதி நிலவளம் வேண்டியும், தமிழகத்தில் நல்ல மழை பெய்து, கோடைவெயிலின் தாக்கம் குறைந்திடவும்,கொரோனா நோய் தொற்றிலிருந்து பொதுமக்கள் மீண்டு வரவும் அனைத்து உயிர்களுக்கும் தட்டுப்பாடு இல்லாமல் குடிதண்ணீர் கிடைத்திட வேண்டியும்,

விவசாயம் செழித்து அனைவரும் நலமுடன் வாழ வேண்டியும் பஜனை பாடல்களுடன் தீப அலங்காரம் நடைபெற்றது. பின்னர் நிகழ்ச்சியில் பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
சின்ன காளியம்மன் கோயில் வளாகத்தில் நடைபெற்ற குத்து விளக்கு பூஜைக்கு ராஜா (என்ற) கோவிந்தசாமி தலைமை வகித்தார். வ.உ.சி. பேரவைத்தலைவர் உலகநாதன், மணிகண்டன், சிவா, கார்த்தி, பாலு, சரவணன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் 200க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். குத்து விளக்கு பூஜையில் உலகில் அன்பு அமைதி நிலவளம் வேண்டியும், தமிழகத்தில் நல்ல மழை பெய்து, கோடைவெயிலின் தாக்கம் குறைந்திடவும்,கொரோனா நோய் தொற்றிலிருந்து பொதுமக்கள் மீண்டு வரவும் அனைத்து உயிர்களுக்கும் தட்டுப்பாடு இல்லாமல் குடிதண்ணீர் கிடைத்திட வேண்டியும்,
விவசாயம் செழித்து அனைவரும் நலமுடன் வாழ வேண்டியும் பஜனை பாடல்களுடன் தீப அலங்காரம் நடைபெற்றது. பின்னர் நிகழ்ச்சியில் பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.