தாராபுரம் சின்னக்காளி அம்மன் கோயிலில் குத்துவிளக்கு பூஜை - ஆர்வத்துடன் பங்கேற்ற பெண்கள்!

தாராபுரத்தில் உள்ள தென்தாரை ஸ்ரீசின்னக்காளியம்மன் கோயிலில் தமிழகத்தில் நல்ல மழை பெய்து, கோடைவெயிலின் தாக்கம் குறைந்திடவும், அனைத்து உயிர்களுக்கும் தட்டுப்பாடு இல்லாமல் குடிதண்ணீர் கிடைக்ககோரி பஜனை பாடல்களுடன் தீப அலங்காரம் நடைபெற்றது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் தென்தாரை அருள்மிகு ஸ்ரீ, சின்னக்காளி காளியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு 8வது ஆண்டாக 108 குத்துவிளக்கு 'பூஜை நடைபெற்றது.

சின்ன காளியம்மன் கோயில் வளாகத்தில் நடைபெற்ற குத்து விளக்கு பூஜைக்கு ராஜா (என்ற) கோவிந்தசாமி தலைமை வகித்தார். வ.உ.சி. பேரவைத்தலைவர் உலகநாதன், மணிகண்டன், சிவா, கார்த்தி, பாலு, சரவணன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.



இந்த நிகழ்ச்சியில் 200க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். குத்து விளக்கு பூஜையில் உலகில் அன்பு அமைதி நிலவளம் வேண்டியும், தமிழகத்தில் நல்ல மழை பெய்து, கோடைவெயிலின் தாக்கம் குறைந்திடவும்,கொரோனா நோய் தொற்றிலிருந்து பொதுமக்கள் மீண்டு வரவும் அனைத்து உயிர்களுக்கும் தட்டுப்பாடு இல்லாமல் குடிதண்ணீர் கிடைத்திட வேண்டியும்,



விவசாயம் செழித்து அனைவரும் நலமுடன் வாழ வேண்டியும் பஜனை பாடல்களுடன் தீப அலங்காரம் நடைபெற்றது. பின்னர் நிகழ்ச்சியில் பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

Newsletter

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...

முதல்வர் விஜய் - எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் சந்திப்பு

அதிமுக முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகத்தை முதல்வர் விஜய் நேரில் சந்தித்தது தமிழக அரசியல் வட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் சர்வதேச செவிலியர் தினம் 2026 சிறப்பாக கொண்டாடப்பட்டது

கோயம்புத்தூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் மே 12, 2026 அன்று சர்வதேச செவிலியர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது...

சென்னை - கோவை இடையே கோடை சிறப்பு ரயில்கள் இயக்கம்

கோடை விடுமுறையில் அதிகரித்த பயணிகள் தேவையை கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே மே 2026ல் சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக செ...

பிரதமர் மோடியின் தங்க வாங்காதீர்கள் அறிவுறுத்தல்: 5 கோடி பேரின் வாழ்வாதாரம் ஆபத்தில் - நகை தயாரிப்பாளர்கள் எச்சரிக்கை

பிரதமர் Narendra Modi தங்கம் வாங்குவதை ஒரு ஆண்டு தவிர்க்குமாறு அறிவுறுத்தியதால் நாடு முழுவதும் தங்க நகைத் தொழிலில் ஈடுபட...