மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் முதல்முறையாக தோல் தானம் - மருத்துவர்கள் சாதனை!

மேட்டுப்பாளையத்தில் தற்கொலை செய்து கொண்ட நாகராஜ் என்ற இளைஞரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்ட நிலையில், முதல் முறையாக தோல் தானம் பெறப்பட்டு மற்றொருவருக்கு பொருத்தப்பட உள்ளது என மருத்துவர்கள் தெரிவித்தனர்.


கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் முதல்முறையாக உயிரிழந்த நபரின் தோல் தானமாக பெறப்பட்டது.

மேட்டுப்பாளையம் அடுத்த நடூர் பகுதியை சேர்ந்தவர் நாகராஜ் (31). இவர், மேட்டுப்பாளையத்தில் உள்ள ஜவுளிக்கடை ஒன்றில் வேலை பார்த்து வந்த நிலையில் இன்று அவரது வீட்டில் திடீரென தற்கொலை செய்து கொண்டார்.



இதனையடுத்து அவரது உடல் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக எடுத்து செல்லப்பட்டது. இந்நிலையில், அவரது உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது. அதன்படி, உயிரிழந்த நாகராஜ் உடலில் இருந்து தோல் மற்றும் கண்களை தானம் செய்ய அவரது தாய் வள்ளி ஒப்புதல் அளித்தார்.



இந்நிலையில் கோவையில் இருந்து சிறப்பு மருத்துவர்கள் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு வந்தனர். உடல் உறுப்புகளை தகுந்த பாதுகாப்பு வசதியுடன் எடுத்து செல்ல கூடிய பெட்டிகளுடன் வந்த மருத்துவர்கள் நாகராஜின் உடல் உறுப்புகளை அறுவை சிகிச்சை மேற்கொண்டு தனியார் மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர்.

நாகராஜின் உடலில் இருந்து எடுத்துச் செல்லப்பட்ட தோல் தீக்காயம் ஏற்பட்டு தோல் பாதிப்புக்குள்ளானவர்கள் மற்றும் விபத்தில் சிக்கி பெரிய அளவில் காயம் அடைந்தவர்களுக்கு தகுந்த மருத்துவ பரிசோதனைக்கு பின் பொருத்தப்படும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை உருவாகிய 138 ஆண்டுகளில் இதுவரை தோல்தானம் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...