உடுமலையில் விதை, உரம் விற்பனையில் விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை!

திருப்பூர்: உரம் விற்பனையாளர்கள் சட்டத்தின் அனைத்து விதிகளையும் முறையாக பின்பற்ற வேண்டும், தடை செய்யப்பட்ட மருந்துகளின் பட்டியலை எழுதி வைத்துக்கொண்டு விற்பனையில் விழிப்புணர்வாக இருக்க வேண்டும் என்று திருப்பூர் மாவட்ட வேளாண் இயக்குநர் மாரியப்பன் தெரிவித்தார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் வட்டாரங்களில் சாகுபடிக்கு தேவையான விதை, பூச்சிக்கொல்லி மருந்து விற்பனைக்கு 75-க்கும் மேற்பட்ட தனியார் விற்பனை கடைகள் உள்ளன. மேலும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் வாயிலாகவும், உரங்கள் விற்பனை செய்து வருகின்றனர்.



இந்நிலையில் தோட்டக்கலை துறை சார்பில் விநியோகிக்கப்பட்ட பப்பாளி விதைகள் போலியானது என விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் புகார் தெரிவித்திருந்தனர். அதனடிப்படையில் மூன்று வட்டார விதை மற்றும் விற்பனையாளர்கள் தோட்டக்கலைத்துறை வேளாண்மை துறை விதைசான்று துறையினர், மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் பங்கேற்ற சிறப்பு கூட்டம் உடுமலை வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் நடைபெற்றது.

இதில் பேசிய திருப்பூர் மாவட்ட வேளாண் இயக்குநர் மாரியப்பன், விதை, உரம் விற்பனையாளர்கள் சட்டத்தின் அனைத்து விதிகளையும் முறையாக பின்பற்ற வேண்டும், புதியதாக விதைகளை அறிமுகப்படுத்தும் போது தரம் குறித்து பரிசோதனைகளை செய்வது அவசியம் தடை செய்யப்பட்ட மருந்துகளின் பட்டியலை எழுதி வைத்துக்கொண்டு விற்பனையில் விழிப்புணர்வாக இருக்க வேண்டும்.

அனைத்து கடைகளிலும் இருப்பு மற்றும் விலைப்பட்டியல் கட்டாயம் வைத்திருக்க வேண்டும். கடைகளுக்கு, கடை விலை வித்தியாசம் இருக்கக் கூடாது. பூச்சி மற்றும் நோய் தாக்குதலுக்கு பரிந்துரை செய்யப்படும் மருந்துகள் குறித்து விழிப்புணர்வு அவசியமாகும்.

எனவே வரும் காலங்களில் இது சார்ந்த பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு மட்டும் விதை மற்றும் உரிமம், உரம் விற்பனைக்கான உரிமம் சான்று வழங்கப்படும். விதிமுறைகளை முறையாக பின்பற்றுவது குறித்து சிறப்பு அதிகாரிகள் குழுவினர் திடீர் ஆய்வு செய்யும் போது, விதிமுறை மீறல் இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

எனவே விற்பனையாளர்கள், அனைத்து விதிமுறைகளையும் முறையாக பின்பற்றாவிட்டால் பாரபட்சமின்றி உரிமம் ரத்து செய்யப்படும், என்றார்.

Newsletter

கோவை சிறைக்குள் தின்பண்டத்தில் மறைத்து கஞ்சா கடத்த முயற்சி : 4 பேர் மீது வழக்குப்பதிவு..!

கோவை மத்திய சிறையில் உள்ள கைதிகளுக்கு தின்பண்டங்களுக்குள் மறைத்து கஞ்சா கொடுக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளத...

கற்பகம் மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கு அவசரகால பயிற்சி

கோவையில் உள்ள கற்பகம் மருத்துவமனை ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கான சந்திப்பையும் Basic Life Support மற்றும் அதிர்ச்சி சிகிச்...

கோவையில் ரயில்கள் மீது கல்வீச்சு சம்பவங்கள்: ஆர்.பி.எப் கண்காணிக்க நடவடிக்கை.

கோவையில் ரயில்கள் மீது தொடர்ந்து நடைபெற்று வரும் கல்வீச்சு சம்பவங்களை தொடர்ந்து, ரயில்வே பாதுகாப்புப் படையினர் (RPF) தண்...

கோவையில் 6 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை : வேன் டிரைவர் போக்ஸோவில் கைது..!

கோவையில் 6 வயது சிறுமிக்கு பள்ளி வேன் டிரைவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் வே...

மேட்டுப்பாளையம் - நெல்லித்துறை சாலையில் தாறுமாறாக நிறுத்தப்படும் கனரக வாகனங்கள் : பக்தர்கள், வாகன ஓட்டிகள் அவதி..!

மேட்டுப்பாளையம் - நெல்லித்துறை சாலையில் உருளைக்கிழங்கு மற்றும் பூண்டு மண்டிகளுக்கு வரும் கனரக லாரிகள் தாறுமாறாக நிறுத்தப...

காரமடை அருகே கிணற்றில் தவறி விழுந்த காட்டுப்பன்றிகள் - பத்திரமாக மீட்ட தீயணைப்புத்துறை..!

காரமடை அருகே 60 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்த தாய் மற்றும் குட்டி காட்டுப்பன்றிகளை, தீயணைப்புத்துறையினர் மற்றும் வன...