வால்பாறை - அதிரப்பள்ளி சாலையில் வலம் வரும் காட்டு யானை - வாகன ஓட்டிகள் அச்சம்!

வால்பாறை அதிரப்பள்ளி சாலையில் விரிவாக்க பணியின் போது திடீரென வந்த ஒற்றை காட்டு யானையை கண்ட ஊழியர்கள் அச்சமடைந்து, அலறியடித்து ஓடி பாறைகள் மீது ஏறி பாதுகாப்பாக நின்றுள்ளனர். தகவலறிந்து வந்த வனத்துறையினர் யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர்.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறை அருகே மழுக்கபாறை - அதிரப்பள்ளி சாலையில் சுற்றித்திரியும் ஒற்றை காட்டு யானையால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் பயணித்து வருகின்றனர்.

வால்பாறை அருகேயுள்ள அதிரப்பள்ளி வனப்பகுதியில் கடந்த சில நாட்களாக ஒற்றைக் காட்டு யானை வாகனங்களை மறித்தும் சாலையில் நடந்தும் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தி வருகிறது. இந்நிலையில் இன்று மதியம் கீழ் சோலையார் அணை பகுதியில் சாலை விரிவாக்க பணிகளை ஊழியர்கள் மேற்கொண்டிருந்தனர்.



அப்பொழுது சாலையில் தீடீரென வந்த ஒற்றை காட்டு யானையை கண்ட ஊழியர்கள் அச்சத்தில் அருகில் இருந்த பாறைகள் மேல் ஏறி பாதுகாப்பாக நின்றனர். பின்னர் யானை பாலத்தை கடந்து சென்றது.

இந்நிலையில் தகவலறிந்து வந்த வனத்துறையினர் யானையை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனர். இதனிடையே வால்பாறையில் இருந்து அதிரப்பள்ளி செல்லும் சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் அச்சத்துடனேயே சென்று வருகின்றனர்.

பெரிய கனரக வாகனங்களின் பின் இருசக்கர வாகனங்கள் மற்றும் சிறிய வாகனங்கள் செல்ல வேண்டும் என்று வனத்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.

Newsletter

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை: இளைஞர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததாக பல தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான 22 வயது இளைஞர் மீத...

கோவையில் தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கி சாம்பியன்ஷிப்: ஜூலை 28 முதல்; 32 மாநில அணிகள் பங்கேற்பு

16வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி...

வெள்ளலூரில் குப்பை தரம் பிரிக்கும் மையத்துக்கு எதிர்ப்பு: பொது மக்கள் சாலை மறியல்

வெள்ளலூரில் குடியிருப்பு பகுதிக்கு அருகே குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும்...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...