வால்பாறையில் சமுதாய வளைகாப்பு விழா - 60 கர்ப்பிணி பெண்களுக்கு தட்டு சீர்

கோவை வால்பாறையில் உள்ள நகராட்சி திருமண மண்டபத்தில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவில், சுற்றுவட்டார எஸ்டேட் பகுதியில் உள்ள 60 மேற்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு வளையல் அணிவித்து தட்டு சீர் வழங்கப்பட்டன.



கோவை: கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் சமூக நலத்துறை சார்பாக சமுதாய வளைகாப்பு நடைபெற்றது.



வால்பாறையில் உள்ள நகராட்சி திருமண மண்டபத்தில் சுமார் 60க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு சமூக நலத்துறை சார்பாக வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.



இந்தநிகழ்ச்சியில் வால்பாறை நகர மன்ற தலைவர் அழகு சுந்தரவல்லி மற்றும் நகராட்சி ஆணையாளர் பாலு மற்றும் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதியில் உள்ள கர்ப்பிணி பெண்கள் இணைந்து இந்த வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

அப்போது, அவர்களுக்கு தேவையான ஊட்டச்சத்து உணவுகள் மற்றும் குழந்தை பெறும் காலங்களில் எவ்வாறு இருக்க வேண்டும் எவ்வாறு உணவருந்த வேண்டும் மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.



மேலும் அவர்களுக்கு வளையல் அணிவித்து, பொட்டு வைத்து, தட்டு சீர் வழங்கப்பட்டது.

இதில் குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ரதி பிரியா, திட்ட ஒழுங்கிணைப்பாளர் அனீஸ் குமார், மேற்பார்வையாளர் நாகஜோதி மற்றும் திலகவதி ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

அன்னூர் அருகே 147 மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்த முதியவர் கைது.

கோவை மாவட்டம் அன்னூர் அருகே அனுமதியின்றி மது விற்பனைக்காக 147 மது பாட்டில்கள் பதுக்கி வைத்திருந்த 62 வயது முதியவரை போலீச...

கோவையில் மீன் பிடிக்கச் சென்ற 13 வயது மாணவன் கொலை; சக மாணவர்கள் 2 பேர் கைது

கோவை இருகூர் அருகே வாய்க்காலில் மீன் பிடிக்கச் சென்ற 7ஆம் வகுப்பு மாணவன், சக மாணவர்களால் மதுபாட்டிலால் தாக்கிக் கொலை செய...

Sri Ramakrishna மருத்துவமனையின் இரண்டு நாள் சுகாதார விழிப்புணர்வு கண்காட்சி Brookfield மாலில் தொடக்கம்

உலக ஆஸ்துமா தினம் மற்றும் உலக செரிமான ஆரோக்கிய தினத்தை முன்னிட்டு, Coimbatore Sri Ramakrishna மருத்துவமனை சார்பில் Brook...

“டாஸ்மாக் கடையை மூடுங்கள்” – கோவையில் பெண்கள், குழந்தைகள் திடீர் முற்றுகை போராட்டம்

கோவை: இருகூரில் இருந்து அத்தப்பகவுண்டன்புதூர் செல்லும் சாலையில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுக்கடையை மூட வலியுறுத்தி 50-...

“நான் தான் எல்லாம்” எண்ணத்தில் எடப்பாடி செயல்படுகிறார்: செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமியின் தற்போதைய நிலைப்பாடுகள் எம்....

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...