புதிய மின் இணைப்பு பெற உரிமைச்சான்று கேட்கும் மின்சார வாரியம் - தவிக்கும் உடுமலை மக்கள்!

உடுமலை சுற்றுவட்டார பகுதிகளில் புதிய மின் இணைப்பு பெற விண்ணப்பிக்கும் பொதுமக்களிடம் மின்வாரிய அதிகாரிகள் உரிமைச்சான்று கேட்கும் நிலையில், வருவாய் துறையினர் உரிமை சான்று கொடுக்க மறுப்பதால் செய்வதறியாது பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.


திருப்பூர்: உடுமலை பகுதியில் புதிய மின் இணைப்பு பெற மின்வாரிய அதிகாரிகள் உரிமைச்சான்று கேட்பதால் பொதுமக்கள் செய்வது அறியாது தவித்து வருகின்றனர்.

இதுகுறித்து பொதுமக்கள் தரப்பில் கூறியதாவது, பல இன்னல்களுக்குப் பிறகு புதிய வீடு கட்டி அதற்கு, மின் இணைப்பு பெறுவதற்காக மின் வாரியத்தை அணுகும்போது ஆதார் நகல், வீட்டு பத்திரம், வீட்டு வரி ரசீது உள்ளிட்டவைகளோடு, இடத்துக்கு சொந்தக்காரர் அவர் தான் என்பதை உறுதிப்படுத்தும் விதமாக உரிமைச்சான்று வழங்க வேண்டும் என்று கூறுகின்றனர்.

இதை வாங்க, வருவாய்த்துறை அதிகாரிகளை அணுகினால், உரிமைச்சான்று வழங்க வேண்டாம் என்று மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளதாக கூறுகின்றனர். இதனால் பலரும் தவிக்கும் நிலை உரு வாகியுள்ளது.

இந்நிலையில் மின்வாரிய அதிகாரிகளுக்கு குறிப்பிட்ட தொகையை கொடுத்தால் உரிமைச்சான்று இல்லாமலேயே மின் இணைப்பு பெற்று தருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

எனவே கூட்டுறவு கடன் சங்கங்களில், விவசாயிகள் கடன் பெறுவதற்கு உரிமைச்சான்று தேவையில்லை என்று அறிவித்தது போல மின் வாரியத்திலும் அறிவிக்க வேண்டும் எனக் கூறுகின்றனர்.

புதிய மின் இணைப்பு பெறுவதற்காக ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் போது தேவையான ஆவணங்கள் பட்டியலில் உரிமைச் சான்று குறிப்பிடப்படவில்லை. இதுகுறித்த விவரம் தெரிந்தவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து மின் இணைப்பு பெறுகின்றனர்.

இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...