கோவை பி.ஆர்.எஸ் மைதானத்தில் பற்றி எரிந்த வாகனங்களால் பரபரப்பு

குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 200-க்கும் மேற்பட்ட வாகனங்கள், கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்தன. இதில் 30-க்கும் மேற்பட்ட வாகனங்களில் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.



கோவை: கோவை பி.ஆர்.எஸ் மைதானத்தில், மாநகர காவல் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை பி.ஆர்.எஸ் மைதானத்தின் ஒரு பகுதியில், மாநகர காவல் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் மற்றும் பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணையின் கீழ் உள்ள வாகனங்கள் என சுமார் 200-க்கும் மேற்பட்ட பைக் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.



இந்நிலையில் இன்று மாலை திடீரென சுமார் 30-க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீப்பற்றி எரிந்தன.



இது குறித்து தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் வாகனங்களில் ஏற்பட்ட தீயை அணைத்தனர்.



இதுகுறித்து கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில், விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வெயிலின் காரணமாக தீப்பற்றி இருக்கக் கூடும் எனக் கூறப்படும் நிலையில், காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



இந்த தீ விபத்தில் சுமார் 30க்கும் மேற்பட்ட வாகனங்கள் எரிந்து சேதமாகின.



வாகனங்கள் தீப்பற்றி எரிந்ததால் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்து சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...