கோவையில் பிடிபட்டு 24 மணி நேரமாக லாரியில் சுற்றும் மக்னா யானை!

கோவையில் பிடிபட்ட மக்னா யானையை கடந்த 24மணி நேரமாக வனத்துறையினர் லாரியில் வைத்துச் சுற்றுவதால், அந்த யானை சோர்வுடன் காணப்படுகிறது. இறுதியாக மந்திரிமட்டம் வனப்பகுதியில் விடக் கொண்டு செல்லப்பட்ட போது, செய்தியாளர்களுக்கு வனப்பகுதியில் செல்ல அனுமதி மறுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.



கோவை: தருமபுரி மாவட்டம் வனப்பகுதியிலிருந்து வெளியேறி விளைநிலங்களைச் சேதப்படுத்தி மக்களை அச்சுறுத்தி வந்த மக்னா யானையை கடந்த 5ஆம் தேதி மயக்க ஊசி செலுத்திப் பிடிக்கப்பட்ட நிலையில் பொள்ளாச்சி அடுத்துள்ள டாப்ஸ்லிப் வரகளியாறு வனப்பகுதியில் 6ஆம் தேதியன்று விடப்பட்டு வனத்துறையினர் கண்காணித்து வந்தனர்.



இந்நிலையில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு டாப்ஸ்லிப் வனப்பகுதியிலிருந்து வெளியேறிய மக்னா யானை சேத்துமடை, ஆத்து பொள்ளாச்சி, ராமபட்டினம், ஜலத்தூர் போன்ற பகுதிகளில் புகுந்து உலா வந்த நிலையில், இந்த யானை இடம் பெயர்ந்து கோவையை நோக்கி மதுக்கரையை கடந்து பேரூர் சென்றது.



இந்த யானை கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து கோவை மாநகர பகுதிகளில் சுற்றி திரிந்த நிலையில், யானைக்கு மயக்க ஊசி செலுத்திப் பிடிக்க வனத்துறையினர் திட்டமிட்டு நேற்று யானைக்கு மயக்க ஊசி செலுத்தி வனத்துறையினர் யானையைப் பிடித்தனர்.



இந்நிலையில் யானையை சத்தியமங்கலம் வனப்பகுதிக்குக் கொண்டு செல்ல வனத்துறையினர் திட்டமிட்டு லாரி மூலம் கொண்டு சென்ற போது, அப்பகுதி விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் யானையை மீண்டும் பொள்ளாச்சி-ஆனைமலை புலிகள் காப்பக வனப்பகுதிக்குக் கொண்டு செல்ல வனத்துறையினர் திட்டமிட்டு மீண்டும் யானையை பொள்ளாச்சி நோக்கி லாரியின் மூலம் கொண்டு வந்தனர்.



இந்த யானையை வால்பாறை-மானாம்பள்ளி வனச்சரகத்தில் உள்ள அடர்ந்த வனப்பகுதியான மந்திரிமட்டம் என்னும் இடத்தில் விட வனத்துறையினர் திட்டமிட்டு, யானையை மானாம்பள்ளி வனச் சோதனை சாவடியை தாண்டி வனப்பகுதிக்குள் கொண்டு சென்றனர்.



நேற்று கோவையில் பிடிபட்ட யானை 24 மணி நேரமாக, தொடர்ந்து லாரியில் பயணம் செய்ததால் களைப்படைந்த மக்னா யானை மானாம்பள்ளி சோதனை சாவடியை நெருங்கிய போது மயக்க நிலையில் காணப்பட்டது.



மேலும் யானை கொண்டு செல்லப்பட்ட வனப்பகுதிக்குள் செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...

கோவை பீளமேடு 27-வது வார்டில் ரேஷன் கடை மற்றும் தூய்மைப் பணிகள் கவுன்சிலர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம், சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 27-வது வார்டு பகுதிகளில் பல்வேறு மக்கள் ந...

Heavy Rain, Strong Winds Lash Thudiyalur and Surrounding Areas

Heavy rain accompanied by strong winds lashed Thudiyalur and several parts of Coimbatore’s northern outskirts for more t...

துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை

கோவை துடியலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. இதனால் சாலைகளி...

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி வளாகத்தில் டெக் கார்டு லேப்ஸ் அறக்கட்டளை துவக்க விழா

Sri Ramakrishna Engineering College SREC Spark வளாகத்தில் Tech Card Labs Foundation துவக்க விழா நடைபெற்றது. இந்தியா-இஸ்ர...

கோவையில் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர் பவன் குமார் கிரியப்பனவர்

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் கிரியப்பனவர் மற்றும் மாநகராட்சி ஆணையர் M Sivaguru Prabhakaran ஆகியோர் மாநகராட்சி...