ரூ.52 லட்சத்துக்கு ஏலம் போன ஆப்பிள் நிறுவனத்தின் பழைய ஐபோன்!

கரென் கிரீன் என்பவர் கடந்த 2007ஆம் ஆண்டில் ரூ.50,000-க்கு வாங்கிய முதல் தலைமுறை ஐபோன், சீல் பிரிக்கப்படாமல் 15 ஆண்டுகளுக்கு பிறகு ஏலத்திற்கு வந்த நிலையில், இந்த ஐபோன் சுமார் ரூ.52 லட்சத்துக்கு ஏலம் போயுள்ளது.


2007ஆம் ஆண்டு வாங்கப்பட்ட ஐபோன், சுமார் 52 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போயுள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்மார்ட் போன்கள் வரலாற்றில் புதிய புரட்சி என்று அறிமுகம் செய்யப்பட்ட ஆப்பிள் நிறுவனத்தின் முதல் ஐ-போனானது, கடந்த 2007ஆம் ஜூன் 29ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்த ஐபோனை வாங்குவதற்கு அமெரிக்கா போன்ற பல்வேறு நாடுகளில் ஏராளமான மக்கள், முன்பதிவு செய்துவிட்டு, ஆப்பிள் ஸ்டோர்களில் காத்திருந்து வாங்கி சென்றது அன்றைய வைரல் செய்தி என்றால் மிகையாகாது.

ஸ்மார்ட் போன்களில் புதிய புரட்சி என்ற அழைக்கப்பட்ட இந்த ஐபோன் தான், தொடு திரையை கொண்ட முதல் ஸ்மார்ட் போன் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஐபோன், எளிமையான கீபோர்டை கொண்டுள்ளது என்ற பெருமையை தாங்கியே வலம் வந்தது. இந்த ஐபோனின் அப்போதைய விலை சுமார் 50 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது.

இப்போ ஏன் இந்த பழைய கதை என்று தானே கேட்கிறீர்கள். விஷயம் இருக்கிறது. 2007ஆம் ஆண்டு ஆப்பிள் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வந்த முதல் தலைமுறை ஐபோன் தற்போது, 52 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போயுள்ளது.

ஏலம் எடுக்கப்பட்ட அந்த ஐபோனை, கரென் கிரீன் என்பவர் தனது நண்பருக்காக வாங்கியுள்ளார். ஆனால், அந்த நண்பர் வெரிஜோன் நிறுவனத்தில் பணியாற்றி வந்த நிலையில், ஐபோனில் வெரிஜோன் சேவை இல்லாததால், அந்த ஐபோனை பிரிக்கவே இல்லை என கூறப்படுகிறது.

15 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கப்பட்ட சீல் பிரிக்கப்படாத ஐபோன் சமீபத்தில் ஏலத்திற்கு வந்தது. சுமார் 2,500 டாலர் அதாவது இந்திய மதிப்பில் 2.06 லட்சம் ரூபாய் மதிப்பில் ஏலம் துவங்கப்பட்டது.

இந்நிலையில் இந்த ஐபோன் 63,356 டாலருக்கு விற்பனை செய்யப்பட்டது. இந்திய மதிப்பில் இந்த தொகையானது 53 லட்ச ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...