பொள்ளாச்சியில் மண்ணெண்ணெய் விநியோக நிலையத்தில் முறைகேடு - பொதுமக்கள் முற்றுகை!

பொள்ளாச்சி ஜோதி நகர் பகுதியில் உள்ள நுகர்வோர் வாணிபக்கழகத்தில் மண்ணெண்ணெய் முறையாக விநியோகம் செய்யாமல் பொதுமக்கள் அலைக்கழிக்கப்படுவதால், முறைகேடு நடப்பதாக கூறி பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே நுகர்வோர் வாணிபக்கழக மண்ணெண்ணெய் விநியோக நிலையத்தில் முறைகேடு நடப்பதாக கூறி பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பொள்ளாச்சி ஜோதி நகரில் தமிழ்நாடு நுகர்வோர் வாணிப கழகத்தின் கீழ் மண்ணெண்ணெய் விநியோகம் செய்யும் நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு ஜோதி நகர், காமாட்சி நகர், PKS காலனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம் மாதம் மண்ணெண்ணெய் விநியோகம் செய்யப்படுகிறது.

இந்த நிலையில் மண்ணெண்ணெய் விநியோகம் செய்யப்படுவதில் தொடர்ந்து முறைகேடு ஏற்பட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது. இந்த மாதம் மண்ணெண்ணெய் பெறுவதற்காக வந்த பொதுமக்களுக்கு மண்ணெண்ணெய் வழங்காமல் ஊழியர்கள் மண்ணெண்ணெய் இல்லை எனக்கூறி அலைக்கழித்து வரும் சம்பவங்கள் தொடர்கதையாகியுள்ளது.



இந்நிலையில், இன்று காலை முதல் நீண்ட நேரமாக காத்திருந்த பொதுமக்களிடம் அங்கிருந்த ஊழியர்கள் மண்ணெண்ணெய் இல்லை என கூறியதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் மாலையில், முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.



இதனிடையே அங்கு வந்த வாணிபக் கழக மேற்பார்வையாளர் மணிகண்டன் பொதுமக்களை ஒருமையில் பேசியதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அங்கு வந்த காவல்துறையினர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.



கூலி வேலை செய்து வரும் ஏழை எளிய மக்கள் வயதானவர்கள் ஒரு லிட்டர் மண்ணை பெறுவதற்காக மாதக்கணக்கில் அலைய வேண்டிய நிலை உள்ளது கால் கடுக்க காத்திருந்தாலும் மண்ணெண்ணெய் வழங்குவதில்லை தட்டி கேட்டால் ஊழியர்கள் ஒருமையில் பேசி அலட்சியப்படுத்தி வருவதாகவும் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யாமல் முறைகேடு செய்வதாகவும் எனவே உயர் அதிகாரிகள் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முறையாக மண்ணெண்ணெய் விநியோகம் செய்ய வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...