கோவையில் குப்பைமேட்டில் திடீர் தீவிபத்து - மாநகராட்சிக்கு பொதுமக்கள் கோரிக்கை

கோவை செங்காளியப்பன் நகர் பகுதியில் உள்ள குப்பை மேட்டில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தால் அப்பகுதியே புகைமூட்டமாக காட்சியளித்தது. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறை வீரர்கள் தண்ணீரை பீச்சு அடித்து பற்றியெரிந்த தீயை அணைத்தனர்.



கோவை: கோவை அடுத்த செங்காளியப்பன் நகர் பகுதியில் ரயில்வே பிரிட்ஜ் அருகாமையில் குப்பைமேடு ஒன்று இருந்தது.



அதில் திடீரென்று தீப்பற்றி எரிய ஆரம்பித்ததால் அப்பகுதியே புகைமூட்டமாக காட்சியளித்தது. இதனால், அப்பகுதி மக்களும், வாகன ஓட்டிகளும் கடும் அவதிக்குள்ளாகினர்.



தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறை வீரர்கள் தண்ணீரை பீச்சு அடித்து பற்றியெரிந்த தீயை அணைத்தனர்.

இதனால் தீயால் ஏற்படவிருந்த பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. சமூக விரோத கும்பல் புகைபிடித்து விட்டு நெருப்புடன் பீடி சிகரட்டை குப்பையில் போடுவதாலும், சிலர் வேண்டுமென்றே குப்பைமேடுகளில் தீ பற்ற வைப்பதாலும் இது போன்ற விபத்துகள் நடக்கின்றன.



முறையாக குப்பைகளை அப்புறப்படுத்துவதும், சுகாதாரத்தை பேணி பாதுகாப்பதும் அவசியம் என்ற அடிப்படையில் மாநகராட்சி கூடுதலாக கவனம் செலுத்தி கோடை காலத்தில் தீவிபத்துகள் ஏற்படும் முன்னே குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...