கோவை மாநகராட்சி பட்ஜெட் குறித்து ஆலோசனை வழங்கலாம்..! - ஆணையர் பிரதாப் தகவல்

கோவை மாநகராட்சியில் 2023-24ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் குறித்து தங்களது கருத்தை My City My Budget இணையதளம் மூலம் பொதுமக்கள் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளைப் பதிவு செய்யலாம் என்று மாநகராட்சி ஆணையர் மு.பிரதாப் தெரிவித்துள்ளார்.



கோவை: கோவை மாநகராட்சியில் பட்ஜெட் தாக்கல் குறித்து பொதுமக்கள் கருத்துக்கள் தெரிவிக்க இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் மு.பிரதாப் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை மாநகராட்சியில் 2023- 2024 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் விரைவில் தாக்கல் செய்யப்படவுள்ளது. இந்த பட்ஜெட் முன்மொழிவு தொடர்பான பொதுமக்கள் தங்களது ஆலோசனைகள் அல்லது கருத்துகளை My City My Budget இணையதளம் (https://coimbatoresmartcity.org/mycity-mybudget)மூலம் பதிவு செய்யலாம்.

இந்த முயற்சியின் மூலம் நகரத்திற்கான பல்வேறு தேவைகள், கருத்துக்கள் மற்றும் பொதுக்கண்ணோட்டத்தில் பரிந்துரைகள் பற்றிய விரங்களை அறிந்து கொள்ளலாம். மேலும் பொதுமக்கள் வழங்கும் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகள் அனைத்தையும் கருத்தில் கொண்டு, அதிகாரிகள் மற்றும் பிரதிநிதிகள் குழுவுடன் கலந்துரையாடிய பின்னர் தேவையான நிதி மற்றும் திட்டங்களை ஒதுக்க முடியும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Newsletter

கோவை வடக்கு-பீளமேடு இடையே தண்டவாளத்தில் அலுமினிய ஏணி வைத்த இருவர் கைது

கோவை வடக்கு மற்றும் பீளமேடு ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தில் அலுமினிய ஏணியை வைத்த வழக்கில் ரயில்வே பாதுகாப்புப்...

வீட்டில் கஞ்சா செடி வளர்த்த நபருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காரப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தன் (52) தனது வீட்டில் கஞ்சா செடி வளர்த்ததோடு, 4 கிலோ கஞ்சா வ...

பொள்ளாச்சி ஆழியாறு பகுதியில் மது போதையில் தள்ளி இளைஞர் கொலை - குற்றவாளி கைது

பொள்ளாச்சி வட்டம் ஆழியாறு நெல்லித்துறை பகுதியில் குடும்ப பூசல் காரணமாக மது போதையில் வந்த ஆனந்த் என்பவர் பாலகிருஷ்ணனை தள்...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாம்பு தோன்றி பரபரப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பத்திரிகையாளர்கள் அறையில் நேற்று எதிர்பாராதவிதமாக பாம்பு ஒன்று தோன்றியதால் பரபரப்...

மூளைச்சாவடைந்த இளைஞரின் உறுப்பு தானம் மூவருக்கு புதுவாழ்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே உள்ள வெஞ்சமடை பகுதியைச் சேர்ந்த 22 வயது இளைஞர் கருப்புசாமி மே 10ஆம் தேதி இருசக்...

திருப்பூரில் பட்டப்பகலில் அடிதடி; ஒருவர் காயம் – போலீசார் விசாரணை

திருப்பூர் இந்திரா நகர் பகுதியில் ஒருவரை கும்பலாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக 15 வேலம்ப...