கோவையில் காதல் விவகாரத்தில் தந்தை, மகன் மீது தாக்குதல் - 3 பேர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு

கோவை பீளமேடு பகுதியை சேர்ந்த ஹரிஹரன் மற்றும் அவரது தந்தை ராஜசேகர் மீது இரும்பு கம்பி, சுத்தியல் மூலம் தாக்குதல் நடத்திய விக்னேஷ் மற்றும் அவரது நண்பர்கள் 2 பேர் மீது போலீசார் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.


கோவை: கோவை மாவட்டம் பீளமேடு அருகே காதல் விவகாரத்தில் தந்தை மற்றும் மகன் மீது தாக்குதல் நடத்திய விக்னேஷ் உள்பட மூவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

பீளமேடு அடுத்த அண்ணா நகர் ஆறுமுகம் லேஅவுட் பகுதியில் வசிப்பவர் ராஜசேகர். இவர் அதே பகுதியில் மெஸ் ஒன்றை நடத்தி வருகிறார்.

இந்நிலையில், இவரது மகன் ஹரிஹரன் (22), அவரது தந்தையின் ஓட்டலிலேயே வேலை செய்து வருகிறார். இதனிடையே இவர், ஆவராம்பாளையம் பகுதியை சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார்.

இந்நிலையில் அதே பெண்ணை விக்னேஷ் என்பவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் இவர்களுக்குள் தகராறு ஏற்பட்ட நிலையில் விக்கி என்ற விக்னேஷ் தனது நண்பர்கள் 2 பேருடன் ஹரிஹரன் வீட்டுக்கு சென்று தகராறு செய்துள்ளார்.

அப்போது ஹரிஹரனை சுத்தியலால் தாக்கிய அந்த கும்பல், அவரது தந்தை ராஜசேகரை இரும்பு கம்பியால் தாக்கியுள்ளனர். இதில் தந்தை, மகன் இருவரும் படுகாயமடைந்தனர். இதனையடுத்து வீட்டிலிருந்த பொருட்களை உடைத்து சேதப்படுத்தி விட்டு, 3 பேரும் தப்பிச்சென்றுள்ளனர்.

படுகாயம் அடைந்த ஹரிஹரன், அவரது தந்தை ராஜசேகர் ஆகியோர் அவர்களது உறவினர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து காயமடைந்த ஹரிஹரன் பீளமேடு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதன் அடிப்படையில், போலீசார் விக்கி என்ற விக்னேஷ் உட்பட 3 பேர் மீது கொலை முயற்சி, தாக்குதல் உட்பட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...