ஈரோடு தேர்தலில் வெற்றி - கோவை துடியலூரில் திமுகவினர் கொண்டாட்டம்!

ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, கோவை துடியலூரில் தலைமை செயற்குழு உறுப்பினர் டி.பி.சுப்பிரமணியம் தலைமையில் திமுகவினர் பட்டாசு வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.


கோவை: ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக கூட்டணி வேட்பாளர் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, துடியலூரில் திமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

ஈரோடு கிழக்குத் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது. இதில் அதிமுக கூட்டணி வேட்பாளரை, விட திமுக கூட்டணி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி பெற்றுள்ளார்.



இதைக் கொண்டாடும் விதமாக திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு இடங்களில் பட்டாசுகள் வெடித்து இனிப்புகள் வழங்கி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கோவை துடியலூரில் தலைமை செயற்குழு உறுப்பினர் டி.பி.சுப்பிரமணியம் தலைமையில் பட்டாசு வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.



இந்நிகழ்ச்சியில் 2ஆவது வட்டக் கழக செயலாளர் சண்முகம், துணைச் செயலாளர் தமிழ் நிதி, முன்னாள் மாவட்டஅவைத்தலைவர் பழனியப்பன், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் நிதியரசு, கழக நிர்வாகிகள் ஆறுச்சாமி, வெற்றிச்செல்வன், மனோன்மணி ராஜகோபால், சி டி சி சுப்பிரமணியன், வாசு, பழனிச்சாமி, சின்ன சாமி, அயூப் கான், இம்ரான் கான், சுபாஷ், காங்கிரஸ் பேரியக்கத்தைச் சேர்ந்த, நாகராஜ் சிங்காரவேலன் மற்றும் கூட்டணி கட்சியைச் சார்ந்த தோழர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...