கோவை டாஸ்மாக் கடைக்கு வெடிகுண்டு மிரட்டல் - தொழிலாளியை பிடித்து போலீசார் விசாரணை!

கோவையில் குடிபோதையில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக, கோவில்பாளையம் டாஸ்மாக் கடையில் வெடிகுண்டு வீச உள்ளதாகக் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்த விளாங்குறிச்சி சாலையைச் சேர்ந்த ஸ்ரீதர் என்பவரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


கோவை: காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வெடிக்குண்டு மிரட்டல் விடுத்தவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை காவல்துறை மாஸ்டர் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று இரவு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், கோவில்பாளையம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் வெடிகுண்டு வீச உள்ளதாகத் தெரிவித்து விட்டு அழைப்பைத் துண்டித்தார்.

இதையடுத்து போலீசார் அந்த எண்ணை ட்ராக் செய்து விசாரித்த போது தொலைப்பேசியில் அழைத்தவர் விளாங்குறிச்சி சாலையைச் சேர்ந்த ஸ்ரீதர்(51) என்பது தெரியவந்தது. பின்னர் அவரை பிடித்து மேற்கொண்ட விசாரணையில், குடிபோதையில் தனது மனைவியுடன் தகராறு செய்துவிட்டு வெளியே வந்து காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு அழைத்து வெடிகுண்டு வீசப் போவதாக மிரட்டல் விடுத்தது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அவரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...