கோவையில் பேங்க் ஆப் இந்தியா சார்பில் மாரத்தான் போட்டி - ஊழியர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் பேங்க் ஆப் இந்தியா சார்பில் ஊழியர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கான மாரத்தான் போட்டியை கோவை மண்டல மேலாளர் அன்புமணி துவக்கி வைத்த நிலையில் ஊழியர்கள் உள்பட 50க்கும் மேற்பட்டோர் உற்சாகமாக கலந்து கொண்டனர்.


கோவை: ரேஸ்கோர்ஸ்மைதானத்தில் பேங்க் ஆப் இந்தியா சார்பில், வங்கி ஊழியர்களுக்கான மாரத்தான் போட்டி நடைபெற்றது.

பேங்க் ஆப் இந்தியா வங்கி வருடம்தோறும் அவர்களது ஊழியர்களுக்கும் குடும்பத்தினருக்கும் விளையாட்டுப் போட்டிகளை நடத்தி வருகிறது. அதன்படி இந்த ஆண்டு பேங்க் ஆப் இந்தியா வங்கி அவர்களது ஊழியர்களுக்கும், குடும்பத்தினருக்கும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளை நடத்த திட்டமிட்டுள்ளது.



அதன்படி இன்று கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் மூன்று கிலோ மீட்டர் பிரிவுக்கான மாரத்தான் போட்டியை நடத்தியது. இதில் வங்கியின் ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் கலந்து கொண்டனர். இந்த மாரத்தான் போட்டியை கோவை மண்டல மேலாளர் அன்புமணி துவக்கி வைத்தார்.

குழந்தைகள், இளைஞர்கள், பெரியவர்கள் என மூன்று பிரிவுகளாக நடத்தப்பட்ட இந்த மாரத்தான் போட்டியில் சுமார் 50க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். இதில் வெற்றி பெற்றவர்களுக்கு கோவை மண்டல உதவி பொது மேலாளர்கள் முனுசாமி ராஜி, பிரதீப் ரஞ்சன்பால், மோகன் மரேதி ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.

மேலும் வருகின்ற 11ஆம் தேதி பாரதியார் பல்கலையில் கிரிக்கெட், சதுரங்கம், இசை நாற்காலி, கேரம்போர்டு, உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகள் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. கொரொனா காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக பேங்க் ஆப் இந்தியாஇந்த போட்டிகளை நடத்தாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...