பொள்ளாச்சி அருகே தோட்டத்தில் புகுந்த 6 அடி நீள மலைப்பாம்பு - பத்திரமாக மீட்ட வனத்துறை!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே புளியங்கண்டி பகுதியில் உள்ள தோட்டத்தில் பதுங்கியிருந்த 6 அடி நீள மலைப்பாம்பை, வேட்டை தடுப்பு காவலர் சக்திவேல் லாவகமாக பிடித்தார். பின்னர் பாம்பு, ஆழியார் அருகே உள்ள வனப்பகுதிக்குள் விடப்பட்டது.



கோவை: பொள்ளாச்சி அடுத்த புளியங்கண்டி பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில் பணியாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர்.

அப்போது, அவர்கள் வேலை செய்த பகுதியில் மலைப்பாம்பு பதுங்கியிருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.



இது குறித்து தோட்டத்து உரிமையாளருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன்பேரில், தோட்டத்து உரிமையாளர் வனத்துறையினருக்கு தகவல் அளித்தார்.



பின்னர் அங்கு விரைந்து வந்த வனத்துறை வேட்டை தடுப்பு காவலர் சக்திவேல் என்பவர் சுமார் ஆறு அடி நீளம் உள்ள மலைப்பாம்பை பாதுகாப்பாக பிடித்தார்.

இதையடுத்து, அந்த மலைபாம்பு ஆழியார் அருகே உள்ள அடர்ந்த வனப்பகுதிக்குள் பத்திரமாக விடப்பட்டது.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...