தாராபுரம் அமராவதி ஆற்றில் 2 தடுப்பணைகள் - கட்டுமான பணியை துவக்கி வைத்த அமைச்சர்கள்!

தாராபுரம் அருகே அமராவதி ஆற்றின் குறுக்கே ரூ.21 கோடி மதிப்பீட்டில் 2 தடுப்பணைகள் கட்டும் பணியை தமிழ்நாடு செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி ஆகியோர் அடிக்கல் நாட்டி பூமி பூஜை செய்து துவக்கி வைத்தனர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே அமராவதி ஆற்றில் தடுப்பணைகள் கட்டும் பணியை அமைச்சர்கள் சாமிநாதன் மற்றும் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தனர்.

தாராபுரம் வழியாக செல்லும் அமராவதி ஆற்றில் தடுப்பணைகளை கட்டி தொகுதிக்கு உட்பட்ட கிராமப் பகுதிகளின் விவசாயம் மற்றும் குடிநீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்பது தொகுதி சார்ந்த கிராம மக்களின் நீண்டகால கோரிக்கையாக இருந்து வந்தது.



இந்நிலையில், கிராம மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றித் தர தமிழ்நாடு அரசு முழு ஒப்புதல் அளித்ததன் அடிப்படையில் மாம்பாடி ஊராட்சி புங்கன் துறை அருகே செல்லும் அமராவதி ஆற்றிலும், கொளத்துப்பாளையம் பேரூராட்சி கவுண்டன் வலசு கிராமத்தின் வழியாக செல்லும் அமராவதி ஆற்றிலும் தடுப்பணைகள் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக தலா 10 கோடியே 70 லட்சம் செலவில் மொத்தம் இரண்டு அணைகளுக்கும் சேர்ந்து 21 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தடுப்பணைகள் கட்ட அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்நிலையில் தடுப்பணைகள் கட்டும் பணியின் துவக்க விழா இன்று நடைபெற்றது.



இந்த விழாவில், தமிழ்நாடு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டு, அடிக்கல் நாட்டி பூமிபூஜை செய்து கட்டுமான பணிகளை துவக்கி வைத்தனர்.



இந்த நிகழ்வில் ஏராளமான கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

அங்கலக்குறிச்சியில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடைபெறுகிறது

அங்கலக்குறிச்சி கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது...

பரளிக்காடு சூழல் சுற்றுலா இன்று முதல் மீண்டும் தொடக்கம்

கோவை மாவட்டம் காரமடை வனச்சரகத்தில் உள்ள பில்லூர் அணையின் பரளிக்காடு சூழல் சுற்றுலா கனமழை எச்சரிக்கை காரணமாக ஒரு வாரமாக ந...

திருப்பூரில் குடியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து குட்கா விற்பனை; 60 கிலோ பறிமுதல் – 2 வட மாநில இளைஞர்கள் கைது

திருப்பூர் நொச்சிபாளையம் பகுதியில் குடியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்ட 60 கிலோ குட்கா பொருட்களை போ...

திருப்பூரில் டியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து குட்கா விற்பனை; 60 கிலோ பறிமுதல் – 2 வட மாநில இளைஞர்கள் கைது

திருப்பூர் நொச்சிபாளையம் பகுதியில் குடியிருப்பு வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்ட 60 கிலோ குட்கா பொருட்களை போல...

மின்கம்பி விழுந்து சோலார் மின்வேலியில் மின்சாரம் பாய்ந்து பெண் விவசாயி பரிதாபமாக உயிரிழப்பு

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம் நாயக்கன்பாளையம் ஊராட்சி அண்ணாநகர் பகுதியில் அறுந்து விழுந்த மின்கம்பி சோலார்...

அம்மா உணவகங்கள்: புதுப்பித்து, தரமான, சுவையான உணவு வழங்க முதல்வர் உத்தரவு – எஸ்.பி.வேலுமணி பாராட்டு..!

தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் 620 அம்மா உணவகங்களை புதுப்பித்து, தரமான மற்றும் சுவையான உணவு வழங்க முதலமைச்சர் விஜய்...