பொள்ளாச்சியில் குண்டும் குழியுமான சாலைகள் - சாலையில் வாழைமரத்தை நட்டு பாஜகவினர் போராட்டம்

உடுமலை - கோவை சாலையில் தலைமை தபால் நிலையம் முன்பு சாலை குண்டும் குழியுமாக இருப்பதால் விபத்து ஏற்படுவதாக கூறி கோவை மாவட்ட தலைவர் பரமகுரு தலைமையில் பாஜகவினர், சாலையின் நடுவே வாழை மரத்தை நட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை: பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட 36 வார்டுகளில் பல்வேறு பகுதிகளில் சாலைகள் மிகவும் பழுதடைந்து குண்டும் குழியமாக காணப்படுவதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாகி வருகின்றனர்.



மேலும், பாதாள சாக்கடை திட்டப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு ஏழு வருடங்கள் முடிவடைந்த நிலையில் பணிகள் முழுமையாக நிறைவடையாததால் ஆங்காங்கே சாலைகள் பழுதடைந்து காணப்படுகிறது. இதனால் அடிக்கடி வாகன விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது.



இந்நிலையில், போக்குவரத்து அதிகம் உள்ள உடுமலை - கோவை சாலையில் உள்ள தலைமை தபால் நிலையம் முன்பு சாலை பல நாட்களாக குண்டும் குழியுமாக காணப்படுவதால் விபத்துக்கள் ஏற்படுவதாக கூறி நகர பாரதிய ஜனதா கட்சியின் கோவை மாவட்ட தலைவர் பரமகுரு தலைமையில், பழுதடைந்த சாலையின் நடுவே வாழை மரத்தை நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், பழுதடைந்த சாலைகளை சீரமைக்க வலியுறுத்தி கண்டன முழக்கங்களையும் அவர்கள் எழுப்பியதால் தபால் நிலையம் முன்பு பரபரப்பு ஏற்பட்டது.



பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய காவல்துறையினர் சமாதான பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து பாஜகவினர் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இந்தப் போராட்டத்தால் கோவை - உடுமலை - பொள்ளாச்சி சந்திப்பு சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Newsletter

“நாங்கள் கட்சிக்காக வாக்கு கேட்கவில்லை; அடுத்த தலைமுறைக்காக வாக்கு கேட்கிறோம்” – கோவையில் சுப. வீரபாண்டியன் விமர்சனம்

கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் செந்தில் பாலாஜியை ஆதரித்து, திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப. வீரபாண்டி...

சிங்காநல்லூர் தொகுதி: மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆவாரம்பாளையத்தில் வாக்கு சேகரிப்பு

சிங்காநல்லூர் தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆதரவாக ஆவாரம்பாளையம் பகுதியில் தீவிர...

சூலூர்: “சொந்தக் குடும்பத்தினரையே சந்திப்பதில்லை; இதில் எங்களை எப்படி சந்திப்பார் என்று நம்புவது”- தவெக வெட்பாளரிடம் பெண்கள் சரமாரி கேள்வி.

சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கண்ணம்பாளையம் வாரச்சந்தையில், தவெக வேட்பாளர் என்.எம். சுகுமார் பிரச்சாரத்தின் போது, விஜ...

தாராபுரம்: “கொங்கு மண்டலம் புறக்கணிப்பு; 5 ஆண்டுகளாக திராவிட மாடல் ஆட்சியில் ஒரு பிரச்சனைக்கும் தீர்வு இல்லை” – அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு

தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் பி...

கோவை: மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்கு பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில், இந்த பணிக்காக 160-க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 9000-க்கும...

கோவையில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் இன்று...