பேரூர் கோவிலில் மயங்கி விழுந்து உயிரிழந்த கேரள நபர் - கதறி அழுத உறவினர்கள்!

கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டத்தை சேர்ந்த நாராயணசாமி என்பவர், மறைந்த தனது அக்காவிற்கு படித்துறையில் திதி கொடுத்துவிட்டு கோவை பேரூர் கோவில் தரசினம் செய்தபோது தீடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



கோவை: கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டத்தை சேர்ந்தவர் நாராயணசாமி என்கிற பாபு (வயது55). மர ஆசாரி மற்றும் கோவில்களில் சண்டமேளம் வாசித்து வந்தார். இவரது மனைவி தனலட்சுமி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்குமுன் தனலட்சுமியின் அக்கா காலமானார். அவருக்கு திதி கொடுப்பதற்காக நாராயணசாமி, தனலட்சுமி மற்றும் அவரது உறவினர்கள் வேனில் இன்று காலை கோவை வந்தனர்.

முன்னதாக பேரூர் படித்துறையில் திதி கொடுத்துவிட்டு, பேரூர் பட்டீஸ்வரரை தரிசனம் செய்தனர். பின்னர் காலபைரவர் சன்னதியில் தரிசனம் செய்தபோது நாராயணசாமி திடீரென மயங்கி விழுந்தார். இதையடுத்து, உறவினர்கள் 108 ஆம்புலென்ஸில் அவ மருத்துவனைக்கு அழைத்துச்சென்றனர். அதில் வந்த அவசரகால மருத்துவர் பரிசோதனை செய்தபோது நாராயணசாமி உயிரிழந்தது தெரியவந்தது.

இதைக்கேட்டு கதறி அழுத உறவினர்களால் அப்பகுதியே சோகத்தில் மூழ்கியது. இதையடுத்து பேரூர் கிராம நிர்வாக அலுவலர், பேரூர் போலீசார் விசாரணைக்கு பின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.



கோவில் வளாகத்தில் பக்தர் ஒருவர் உயிரிழந்ததால் பேரூர் கோவில் நடை அடைக்கப்பட்டது. பின்னர் வாஸ்து சாந்தி செய்து நடை திறக்கப்படும் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

Newsletter

போதைப் பொருட்கள் தடுப்புப் படை: கோவையில் சிறப்புப் படையினர் தயார் நிலையில்!

கோவை மாநகர மற்றும் மாவட்ட காவல்துறையினர், முதல்வர் ஜோசப் விஜய் அறிவித்த போதைப் பொருட்கள் தடுப்புப் படை மற்றும் சிங்கப் ப...

கோவை மாநகராட்சி: குடிநீர் குறைகளை மண்டல வாரிய எண்களில் தெரிவிக்கலாம்

கோவை மாநகராட்சி ஆணையர் M Sivaguru Prabhakaran, குடிநீர் விநியோகம் தொடர்பான குறைகளை மண்டல வாரியாக தெரிவிக்க பொதுமக்களுக்க...

கோவையில் ரூ.9.90 கோடியில் பாரா ஒலிம்பிக் உள் விளையாட்டு வளாகம் அமைக்கப்படுகிறது

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் கவுண்டம்பாளையம் ஜீவா நகர் பகுதியில் மாற்றுத்திறனாளிகளுக்கான உலகத்தரம் வாய்ந்த பா...

கோவை சிறைக்குள் தின்பண்டத்தில் மறைத்து கஞ்சா கடத்த முயற்சி : 4 பேர் மீது வழக்குப்பதிவு..!

கோவை மத்திய சிறையில் உள்ள கைதிகளுக்கு தின்பண்டங்களுக்குள் மறைத்து கஞ்சா கொடுக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளத...

கற்பகம் மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கு அவசரகால பயிற்சி

கோவையில் உள்ள கற்பகம் மருத்துவமனை ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கான சந்திப்பையும் Basic Life Support மற்றும் அதிர்ச்சி சிகிச்...

கோவையில் ரயில்கள் மீது கல்வீச்சு சம்பவங்கள்: ஆர்.பி.எப் கண்காணிக்க நடவடிக்கை.

கோவையில் ரயில்கள் மீது தொடர்ந்து நடைபெற்று வரும் கல்வீச்சு சம்பவங்களை தொடர்ந்து, ரயில்வே பாதுகாப்புப் படையினர் (RPF) தண்...