சுவரொட்டிகளால் கலையிழக்கும் கிணத்துக்கடவு மேம்பால தூண்கள் - நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை!

கோவை கிணத்துக்கடவு பகுதியில் உள்ள மேம்பால தூண்களில் சுவரொட்டிகள் ஒட்டப்படுவதைத் தடுப்பதோடு, அழகிய ஓவியங்களை தூண்களில் தீட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.


கோவை: கோவை கிணத்துக்கடவு பகுதியில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த வழியாக ஆயிரக்கணக்கான வாகனங்கள் நாள்தோறும் கடந்து செல்கின்றன. பொதுமக்கள் அதிகளவில் வந்து செல்லும் இடமாகவும், போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாகவும் இது இருந்து வருகிறது.

இந்நிலையில், இங்குள்ள மேம்பாலத்தின் தூண்களில் சுவரொட்டிகள் ஒட்ட தடை விதிக்கப்பட்டுள்ளபோதும், அதனை மீறி அதிக அளவில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுவருகின்றன. அரசியல் கட்சியினர், ஆர்ப்பாட்டம், போராட்டம் போன்ற சுவரொட்டிகளால் மேம்பாலத் தூண்கள் கலையிழந்து காணப்படுகிறது. இதனை கட்டுப்படுத்த தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், 'மேம்பால தூண்களில் சுவரொட்டிகள் ஒட்டப்படுவதால் அவை அலங்கோலமாகக் காட்சியளிக்கின்றன. இதைத் தடுக்க, வண்ண வண்ண ஓவியங்களை தூண்களில் தீட்ட வேண்டும். மேலும், தடையை மீறி தூண்களில் சுவரொட்டிகள் ஒட்டுபவர்களுக்கு அபராதம் விதித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

Newsletter

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...

சாதனைகளை கூறி வெற்றி பெறுவேன்; யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை - செந்தில் பாலாஜி

கோவை தெற்கு தொகுதியில் DMK வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் பணி குழு அலுவலகத்தை காந்திபுரத்தில் திறந்து வைத்தார். எதிரண...

கோவையை உலகத் தர நகரமாக மாற்ற கருத்தரங்கம்

கோவை நவஇந்தியாவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “கோயம்புத்தூரை உலகத் தர நகரமாக மாற்றுவோம்” கருத்தரங...

மகாவீர் ஜெயந்தி: மார்ச் 31ல் இறைச்சி விற்பனைக்கு தடை - கோயம்புத்தூர் மாநகராட்சி அறிவிப்பு

மகாவீர் ஜெயந்தி விழாவையொட்டி மார்ச் 31, 2026 அன்று கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில் அனைத்து விதமான இறைச்சி விற்பனை மற்...

கவுண்டம்பாளையம் தொகுதியில் NTK வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கலாமணி ஜெகநாதன் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தா...