திரிபுரா மாநில பாஜகவுக்கு கண்டனம் - உடுமலையில் மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்!

திரிபுரா மாநிலத்தில் மார்க்சிஸ்ட் தலைவர்கள் மற்றும் கட்சி அலுவலகம் மீது பாஜகவினர் தாக்குதல் நடத்தியதைக் கண்டித்து உடுமலை மத்திய பேருந்து நிலையம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



திருப்பூர்: திரிபுரா மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவை காரணமாக வைத்து பாஜக கட்சினர், மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர்கள் மீதும் CPI(M)கட்சிஅலுவலகம் மீதும் தாக்குதல் நடத்துவதை கண்டித்து உடுமலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



உடுமலையில் மத்திய பேருந்து நிலையம் முன்பாக நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு நகர கமிட்டிச் செயலாளர் தண்டபாணி தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் மதுசூதனன்,



மாவட்ட குழு உறுப்பினர்கள் அ.பஞ்சலிங்கம், ஆர்.வி வடிவேல், சி ஐ டி யு மாவட்ட குழு உறுப்பினர் வே.விஸ்வநாதன், CPI(M)மடத்துக்குளம் தாலுக்கா பொறுப்பாளர் எம் எம் வீரப்பன் மற்றும் கட்சியின் நிர்வாகிகள் வி. ராஜரத்தினம் தோழன்ராஜா, வசந்தி ஜஹாங்கீர் உள்ளிட்ட 100க்கு மேற்பட்டோர் கலந்துகொண்டு கண்டன உரை ஆற்றினர்.

Newsletter

கோவை மாநகராட்சி குறைதீர்ப்பு கூட்டம்: குடிநீர் முதல் சாலை வசதி வரை 101 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில் குடிநீர், சாலை, தெருவிளக்கு, பாதாள சாக்...

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...