கோவை- அவிநாசி சாலையில் சுரங்க பாதை மூடல்

கோவை-அவிநாசி சாலையில் உள்ள பாதாள சுரங்க பாதை பயன்பாட்டில் இல்லாததால், சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியதையடுத்து அந்த பாதையை மாநகராட்சி அதிகாரிகள் மூடினர்.


கோவை: அவிநாசி சாலையில் உள்ள பாதாள சுரங்க பாதை பயன்பாட்டில் இல்லாததால் மாநகராட்சி அதிகாரிகள் மூடினர்.

கோவை-அவினாசி சாலையில் மேம்பாலத்தின் கீழ் பொதுமக்கள் ரவுண்டானா பகுதியிலிருந்து புரூக்பாண்ட் சாலைக்குச் செல்ல தனி நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த சுரங்கப்பாதையை, பொதுமக்கள் நீண்ட நாட்களாகப் பயன்படுத்தாமல் விட்டதால், காலப்போக்கில், சமூக விரோதிகள் இந்த சுரங்கப்பாதையைத் திறந்தவெளி கழிப்பிடமாகவும், மது அருந்துவதற்காகவும் பயன்படுத்தி வந்துள்ளனர்.



இந்த பாதையை அடைக்க பொதுமக்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. மேலும் இந்த பகுதியில் பூங்கா அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. இதனால் மாநகராட்சி அதிகாரிகள் இந்த பாதையை அடைத்துள்ளனர்.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'மேம்பாலம் சுரங்கப்பாதையின் ரவுண்டானா பகுதியில் பொதுமக்கள் கடக்கத் தனிப் பாதை அமைக்கப்பட்டது. ஆனால் பின்னர் பொதுமக்கள் பயன்பாடு குறைவாக இருந்ததால் மூடப்பட்டது. இந்த பாதையில் அத்துமீறி நுழைபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...