திரிபுராவில் எதிர்க்கட்சியினர் மீது தாக்குதல் - பாஜகவை கண்டித்து தாராபுரத்தில் சிபிஎம் ஆர்ப்பாட்டம்!

திரிபுராவில் நடைபெற்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதை தொடர்ந்து எதிர்க்கட்சியினர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய பாஜகவினரை கண்டித்து தாராபுரம் அண்ணாசிலை அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: திரிபுராவில் எதிர்க்கட்சியினர் மீது காட்டுமிராண்டி தனமாக தாக்குதல் நடத்திய பாஜகவினரை கண்டித்து திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திரிபுராவில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் மிகக்குறைந்த அளவு பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் நிலைக்கு வந்திருக்கும் பாஜக, ஆத்திரத்தின் உச்சத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சியினரைக் குறி வைத்து கொலை வெறித் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.



பாஜகவின் காட்டுமிராண்டி தனமான இந்த தாக்குதலை கண்டித்து, தாராபுரம் அண்ணாசிலை முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பொன்னுச்சாமி தலைமை நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பாஜகவை கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இந்த ஆர்ப்பாட்டத்தில் சிபிஎம் தாலூகா செயலாளர் என்.கனகராஜ் மற்றும் கட்சி நிர்வாகிகள் முத்துசாமி, கோவிந்தராஜ், ராஜேந்திரன் மற்றும் செங்குட்டுவன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை மாவட்ட பஞ்சாயத்துக்கு தேசிய விருது: நல்லாட்சிக்கான அங்கீகாரம்

கோவை மாவட்ட பஞ்சாயத்து தேசிய அளவில் மூன்றாம் இடம் பெற்று நானாஜி தேஷ்முக் விருதை வெல்ல தேர்வானது. வறுமை ஒழிப்பு, நீர் மேல...

கோவை மாவட்ட பஞ்சாயத்துக்கு தேசிய விருது: நல்லாட்சிக்கான அங்கீகாரம்

கோவை மாவட்ட பஞ்சாயத்து தேசிய அளவில் மூன்றாம் இடம் பெற்று நானாஜி தேஷ்முக் விருதை வெல்ல தேர்வானது. வறுமை ஒழிப்பு, நீர் மேல...

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு, திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர...

திருமணமானதை மறைத்து கர்ப்பமாக்கிய பெண்ணுக்கு மிரட்டல்: காவலர் கைது

கோவை அருகே திருமணமானதை மறைத்து இளம்பெண்ணை காதலித்து கர்ப்பமாக்கியதுடன், கட்டாய கருக்கலைப்பு மற்றும் கொலை மிரட்டல் விடுத்...

கோவை ஜிடி நாயுடு மேம்பாலத்தில் இன்று இரவு முதல் போக்குவரத்து கட்டுப்பாடு

கேபிள் பதிக்கும் பணி காரணமாக கோவை ஜிடி நாயுடு மேம்பாலத்தில் இன்று (மே 14) இரவு முதல் வாகனங்கள் செல்ல கட்டுப்பாடுகள் விதி...

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...