கோவையில் என்கவுண்டர் பயத்தில் வீடியோ வெளியிட்ட ரவுடி கவுதம் - சென்னை நீதிமன்றத்தில் சரண்!

கோவையை சேர்ந்த பிரபல ரவுடியான கவுதம், கடந்த சில நாட்களுக்கு முன்பு என்கவுண்டர் பயத்தில் வெளியிட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், சென்னை நீதிமன்றத்தில் அவர் சரணடைந்துள்ளார். அவரை கோவைக்கு அழைத்து வந்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.


கோவை: என்கவுண்டர் பயத்தில் வீடியோ வெளியிட்ட கோவையை சேர்ந்த பிரபல ரவுடி கவுதம், சென்னை நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.

கோவை காமராஜர் புரத்தை சேர்ந்தவர் கவுதம். இவர் மீது ரத்தினபுரியை சேர்ந்த குரங்கு ஸ்ரீராம் கொலை வழக்கு உட்பட பல்வேறு அடிதடி வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில், ரவுடி கவுதமின் கூட்டாளியான கோகுல் என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவை நீதிமன்றம் அருகே கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.

இந்நிலையில் நீண்ட நாட்களாக ரவுடி கவுதம் தலைமறைவாக இருந்து வந்தார். மேலும் அவரை பிடிக்க போலீசாரும் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் ரத்தினபுரி போலீசார் கஞ்சா பதுக்கி விற்பனை செய்ததாக கவுதமின் மனைவி மோனிஷா (21), அவரது சகோதரி தேவிஸ்ரீ (28), மோனிஷாவின் மாமியார் (48) ஆகியோரை கடந்த சில தினங்களுக்கு முன் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதில் கைது செய்யப்பட்ட மோனிஷா கர்ப்பிணியாக இருந்தார். இந்த நிலையில் தலைமறைவாக இருந்த ரவுடி கவுதம் விடியோ ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியோ சமூக வளைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

அந்த வீடியோவில் அவர், நான் கடந்த 8 ஆண்டுகளாக அடிதடி சம்பவங்களில் ஈடுபட்டிருந்தேன். 4 ஆண்டுகளுக்கு முன் எனக்கு திருமணம் நடைபெற்றது. அப்போது முதல் ஒழுக்கமாக வாழ்ந்து வருகிறேன். எனக்கு 7 வழக்குகளில் பிடிவாரண்ட் உள்ளதால் என்னை சுட்டு பிடிப்பேன் என்று பயமுறுத்துகின்றனர்.

என்னை என்கவுண்டர் செய்ய போவதாக, போலீசாரே என்னிடம் தெரிவித்தனர். நான் வாழ வேண்டும் என்று நினைக்கிறேன். கடந்த 4 வருடமாக எந்த பிரச்சனையிலும் நான் ஈடுபடுவதில்லை. திருந்தி வாழ்கிறேன். என்னை சிக்கவைக்க பார்க்கிறார்கள். எனக்கு தீர்வு வேண்டும். இவ்வாறு அந்த வீடியோவில் பேசியுள்ளார்.

இந்நிலையில் தொடர்ந்து தலைமறைவாக இருந்த கவுதம், சென்னை நீதிமன்றத்தில் சரணடைந்தார். இதனை தொடர்ந்து அவரை போலீசார் கோவை அழைத்து வந்து விசாரணை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...