கோவையில் என்கவுண்டர் பயத்தில் வீடியோ வெளியிட்ட ரவுடி கவுதம் - சென்னை நீதிமன்றத்தில் சரண்!

கோவையை சேர்ந்த பிரபல ரவுடியான கவுதம், கடந்த சில நாட்களுக்கு முன்பு என்கவுண்டர் பயத்தில் வெளியிட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், சென்னை நீதிமன்றத்தில் அவர் சரணடைந்துள்ளார். அவரை கோவைக்கு அழைத்து வந்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.


கோவை: என்கவுண்டர் பயத்தில் வீடியோ வெளியிட்ட கோவையை சேர்ந்த பிரபல ரவுடி கவுதம், சென்னை நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.

கோவை காமராஜர் புரத்தை சேர்ந்தவர் கவுதம். இவர் மீது ரத்தினபுரியை சேர்ந்த குரங்கு ஸ்ரீராம் கொலை வழக்கு உட்பட பல்வேறு அடிதடி வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில், ரவுடி கவுதமின் கூட்டாளியான கோகுல் என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவை நீதிமன்றம் அருகே கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.

இந்நிலையில் நீண்ட நாட்களாக ரவுடி கவுதம் தலைமறைவாக இருந்து வந்தார். மேலும் அவரை பிடிக்க போலீசாரும் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் ரத்தினபுரி போலீசார் கஞ்சா பதுக்கி விற்பனை செய்ததாக கவுதமின் மனைவி மோனிஷா (21), அவரது சகோதரி தேவிஸ்ரீ (28), மோனிஷாவின் மாமியார் (48) ஆகியோரை கடந்த சில தினங்களுக்கு முன் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதில் கைது செய்யப்பட்ட மோனிஷா கர்ப்பிணியாக இருந்தார். இந்த நிலையில் தலைமறைவாக இருந்த ரவுடி கவுதம் விடியோ ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியோ சமூக வளைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

அந்த வீடியோவில் அவர், நான் கடந்த 8 ஆண்டுகளாக அடிதடி சம்பவங்களில் ஈடுபட்டிருந்தேன். 4 ஆண்டுகளுக்கு முன் எனக்கு திருமணம் நடைபெற்றது. அப்போது முதல் ஒழுக்கமாக வாழ்ந்து வருகிறேன். எனக்கு 7 வழக்குகளில் பிடிவாரண்ட் உள்ளதால் என்னை சுட்டு பிடிப்பேன் என்று பயமுறுத்துகின்றனர்.

என்னை என்கவுண்டர் செய்ய போவதாக, போலீசாரே என்னிடம் தெரிவித்தனர். நான் வாழ வேண்டும் என்று நினைக்கிறேன். கடந்த 4 வருடமாக எந்த பிரச்சனையிலும் நான் ஈடுபடுவதில்லை. திருந்தி வாழ்கிறேன். என்னை சிக்கவைக்க பார்க்கிறார்கள். எனக்கு தீர்வு வேண்டும். இவ்வாறு அந்த வீடியோவில் பேசியுள்ளார்.

இந்நிலையில் தொடர்ந்து தலைமறைவாக இருந்த கவுதம், சென்னை நீதிமன்றத்தில் சரணடைந்தார். இதனை தொடர்ந்து அவரை போலீசார் கோவை அழைத்து வந்து விசாரணை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...