பல்லடம் குற்றவியல் மற்றும் நடுவர் நீதிமன்ற வளாகத்தில் மகளிர் தினத்தையொட்டி கேக் வெட்டி, வழக்கறிஞர்கள் எடுத்துக் கொண்டாடினர். இதைத் தொடர்ந்து உறியடித்தல், கயிறு இழுத்தல் உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகளும் நடைபெற்றது.
திருப்பூர்: பல்லடம் குற்றவியல் மற்றும் நடுவர் நீதிமன்ற வளாகத்தில் மகளிர் தினத்தையொட்டி கேக் வெட்டி, செல்பி எடுத்து வழக்கறிஞர்கள் எடுத்துக் கொண்டாடினர்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் குற்றவியல் மற்றும் நடுவர் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் நீதிபதிகள் மற்றும் நீதிமன்ற அலுவலர்கள் கேக் வெட்டி மகளிர் தினத்தைக் கொண்டாடினர்.
மேலும் பெண் வழக்கறிஞர்கள் குடும்பத்தினரோடு செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
இதன் தொடர்ச்சியாக உறியடித்தல், கயிறு இழுத்தல் போன்ற பல்வேறு விளையாட்டுப் போட்டிகளும் நடைபெற்றன.
இந்நிகழ்வில் குற்றவியல் மற்றும் நடுவர் நீதிபதி சித்ரா, சார்பு நீதிபதி சந்தான கிருஷ்ணசாமி மற்றும் வழக்கறிஞர்கள் குடும்பத்தோடு கலந்து கொண்டனர்.