உலக மகளிர் தினத்தை ஒட்டி, கோவை மத்திய சிறை வளாகத்தில் உள்ள பெண்கள் தனி கிளைச் சிறையில் மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. பெண் சிறைவாசிகளை ஊக்குவிக்கும் விதமாக பல்வேறு போட்டிகளை நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.
கோவை: கோவை மத்திய சிறை வளாகத்தில் பெண்கள் தனி கிளைச்சிறை செயல்பட்டு வருகிறது. இதில் தண்டனை, விசாரணை என சுமார் 100-க்கும் மேற்பட்ட சிறைவாசிகள் உள்ளனர். சர்வதேச மகளிர் தின விழாவை முன்னிட்டு கோவை இரவேல் மறை மாநிலம் மற்றும் நிர்மலா கலைக் கல்லூரி இணைந்து பெண் சிறைவாசிகளை ஊக்குவிக்கும் விதமாக பல்வேறு போட்டிகளை நடத்தியது.
அதில் வெற்றி பெற்றவர்களுக்கு கோவை சரக சிறைத்துறை துணைத் தலைவர் ஜி. சண்முகசுந்தரம் மற்றும் சிறை கண்காணிப்பாளர் ஊர்மிளா ஆகியோர் தலைமையில் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது.
இந்த விழாவையொட்டி அனைத்து சிறைவாசிகளுக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. மகளிர் தினம் கொண்டாட்ட நிகழ்ச்சி, மகிழ்ச்சியும் மிகுந்த புத்துணர்ச்சியும் ஏற்படுத்தியதாக பெண் சிறைவாசிகள் தெரிவித்தனர்.
அதில் வெற்றி பெற்றவர்களுக்கு கோவை சரக சிறைத்துறை துணைத் தலைவர் ஜி. சண்முகசுந்தரம் மற்றும் சிறை கண்காணிப்பாளர் ஊர்மிளா ஆகியோர் தலைமையில் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது.
இந்த விழாவையொட்டி அனைத்து சிறைவாசிகளுக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. மகளிர் தினம் கொண்டாட்ட நிகழ்ச்சி, மகிழ்ச்சியும் மிகுந்த புத்துணர்ச்சியும் ஏற்படுத்தியதாக பெண் சிறைவாசிகள் தெரிவித்தனர்.