'இளைய நிலா' பாடல் புகழ் கிட்டார் கலைஞர் சந்திரசேகர் மறைவு - இசை ரசிகர்கள் இரங்கல்!

இசைஞானி இளையராஜாவுடன் முதல் படத்தில் இருந்து பணியாற்றி வந்த, மூத்த கிட்டார் கலைஞரும், இளைய நிலா பாடலின் இசைத்துணுக்குகளை வாசித்து புகழ் பெற்றவருமான கிட்டார் கலைஞர் சந்திரசேகர் (79) மறைவுக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


சென்னை: பிரபல கிட்டார் கலைஞரான சந்திரசேகரின் மறைவு ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இளையராஜாவின் இசையில் வெளியான பல்வேறு பாடல்களில் கிட்டார் மற்றும் கீ போர்டு கலைஞராக பணியாற்றிய பிரபல கிட்டாரிஸ்ட் கலைஞர் சந்திரசேகர் (79) காலமானார். சந்திரசேகரின் மறைவு இசை ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் திரையுலகின் இசைஞானி இளையராஜாவும், பாடும் நிலா எஸ்.பி.பாலசுப்ரமணியம் ஆகியோர் இணைந்து பணியாற்றிய பாடல்கள் அனைத்துமே ரசிகர்களின் பேவரைட் லிஸ்டில் இடம்பெற்றிருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை என சொல்லலாம்.

இவர்கள் இருவரும் இணைந்து பணியாற்றியதில் பயணங்கள் முடிவதில்லை படத்தில் இடம்பெற்ற ‘இளைய நிலா பொழிகிறதே’ பாடலின் கிட்டார் இசைத் துணுக்குகளை வாசித்து புகழ்பெற்றவர் சந்திரசேகர். இளையராஜாவின் ‘பாடி வா தென்றலே’ மற்றும் ‘பாடும் வானம்பாடி’ உள்ளிட்ட பெரும்பாலான ஹிட் பாடல்களுக்கு சந்திரசேகர் கிட்டார் வாசித்துள்ளார்.

கே.வி. மகாதேவன், எம்.எஸ்.வி, இளையராஜா உள்ளிட்ட பல்வேறு இசையமைப்பாளர்களிடம் கிட்டாரிஸ்டாகவும், கீபோர்ட் கலைஞராகவும் பணியாற்றியுள்ளார்.

இவர், கன்னடம், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி படங்களில் பணியாற்றி உள்ளார். இளையராஜாவின் நீண்டகால நண்பரும், அன்னக்கிளி படத்தில் இருந்து பணிபுரிந்து வந்த மூத்த இசைக் கலைஞர் சந்திரசேகர் என்பது குறிப்பிடத்தக்கது.

சந்திரசேகர் மறைவுக்கு திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...