கோவையில் கள்ளக்காதல் ஜோடி தற்கொலை முயற்சி - சிகிச்சை பலனின்றி பெண் பலி!

கோவை சின்னியம்பாளையத்தில் தனியார் லாட்ஜில் தங்கி இருந்த கிருஷ்ணன் - கிருத்திகா இருவரும் எலி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் இருவரும் அனுமதிக்கப்பட்டனர். இதில் கிருத்திகா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.



கோவை: நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்தவர் கிருத்திகா (வயது 26). இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. இந்த நிலையில், கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தெரிகிறது.

இதனால் கிருத்திகா கடந்த 2 ஆண்டுகளாக தனது கணவரை பிரிந்து பெற்றோர் வீட்டில் வாழ்ந்து வந்தார். அப்போது சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த கிருஷ்ணன் (வயது29) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அந்த நட்பு கள்ளக்காதலாக மாறியது.

இதனையடுத்து 2 பேரும் வீட்டை விட்டு வெளியேறி கடந்த 5 நாட்களுக்கு முன்பு கோயமுத்தூர் வந்தனர். கோவை சின்னியம்பாளையத்தில் உள்ள ஒரு லாட்ஜில் அறைத்து எடுத்து தங்கினர். அங்கு 2 பேரும் எலி மருந்து குடித்தனர். வாடகை கேட்க சென்ற தங்கும் விடுதி ஊழியர்கள், இதைப் பார்த்து 2 பேரையும் மீட்டு இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு கிருத்திகா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கிருஷ்ணனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. சம்பவம் குறித்து பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...

கோவையில் ரயில் மோதி 8 வயது பள்ளி மாணவர் உயிரிழப்பு

கோவை ஒண்டிப்புதூர் பகுதியில் ரயில்வே தண்டவாளப் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 8 வயது பள்ளி மாணவர் பிரகதீஷ் மீது வெள்ளி...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உலக தேனீ தினம் கொண்டாட்டம்

Coimbatore: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 20ஆம் தேதி உலக தேனீ தினம் கொண்டாடப்படுகிறது. தேனீ வளர்ப்பு பயிற்சி...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தக்காளி மற்றும் கற்றாழை மதிப்பூட்டல் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் கோவையில் தக்காளி மற்றும் கற்றாழையிலிருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் இரண...

மலுமிச்சம்பட்டி அரசு இசைக் கல்லூரியில் பட்டம், பட்டயப் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மலுமிச்சம்பட்டி தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் வாய்ப்பாட்டு, வீணை, வயலின், பரதநாட்டியம், நாதஸ்வரம், தவில் உள்ளிட்...