உடுமலை அருகே வீடு தீப்பிடித்து எரிந்து சேதம் - பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் நாசம்

உடுமலை அருகேயுள்ள சடையகவுண்டன் புதூரில் மின்கசிவு காரணமாக வீடு ஒன்று தீப்பிடித்து எரிந்ததில், பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் மற்றும் ரூ.1.50 லட்சம் ரொக்கம் உள்ளிட்டவை எரிந்து நாசமானது.


திருப்பூர்: உடுமலை அருகே மின்கசிவு காரணமாக வீடு ஒன்று தீப்பிடித்து எரிந்து நாசமானது.



திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள அந்தியூர் ஊராட்சிக்கு உட்பட்ட சடைய கவுண்டன் புதூரில் லட்சுமணன் (55) என்பவர் குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்த நிலையில் லட்சுமணன் குடும்பத்துடன் வெளியூரில் உள்ள கோவில் திருவிழாவுக்குச் சென்றார்.



இன்று காலையில் திரும்பி வந்து பார்த்த போது வீடு முழுவதும் எரிந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.



பின்னர் உள்ளே சென்று பார்த்த பீரோவில் வைத்திருந்த வீட்டுப் பத்திரம் உள்ளிட்ட ஆவணங்கள், இரு சக்கர நான்கு சக்கர வாகனம், ரூ.1.50 லட்சம் ரொக்கம் ஆகியவை எரிந்து சேதமானது.

புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதில், மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகின்றது. இருப்பினும் உடுமலை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீ விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...