திருப்பூர் மாவட்டத்தில் 93 மையங்களில் 12 பொதுத்தேர்வு - மாநகராட்சிப் பள்ளியில் ஆட்சியர் ஆய்வு

திருப்பூர் மாவட்டத்தில் 93 தேர்வு மையங்களில் 26 ஆயிரத்து 160 மாணவ, மாணவிகள் இன்று 12ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதுகின்றனர். திருப்பூர் மாநகராட்சி ஜெயா பாய் பள்ளியில் பொதுத்தேர்வு மையத்தை மாவட்ட ஆட்சியர் வினீத் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


திருப்பூர்: தமிழ்நாடு அரசு தேர்வுத்துறையால் நடத்தப்படும் மார்ச் 2023-க்கான பிளஸ்-2 பொதுத் தேர்வுகள் இன்று தொடங்கியது.

இந்தத் தேர்வானது வரும் ஏப்ரல் 3ம் தேதி வரை நடைபெறவுள்ளது.



திருப்பூர் மாவட்டத்தில் இத்தேர்வினை 93 தேர்வு மையங்களில், 213 மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் 25 ஆயிரத்து 664 மாணவ-மாணவிகள், 496 தனித்தேர்வர்கள் என மொத்தம் 26 ஆயிரத்து 160 பேர் தேர்வு எழுதுகின்றனர்.

தேர்வு மையங்களில் பணியாற்ற முதன்மை 1,608 ஆசிரியர்கள் அறை கண்காணிப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.



தேர்வுகளில் முறைகேடுகள் செய்தல், காப்பியடித்தல் மற்றும் ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபடுதல் முதலியவற்றை கண்காணிப்பதற்கு மாவட்ட கலெக்டர் தலைமையிலும், கல்வி அலுவலர்கள் தலைமையிலும்; தனித்தனியாக பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளது.



இந்நிலையில் முதல் நாளான இன்று திருப்பூர் ஜெயா பாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையத்தை மாவட்ட ஆட்சியர் வினித் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...